252மேருமந்தர புராணம்  


 

543. தூயசந் திரன்கலை பெருக நாடொறுந்
    தீயவன் காளகந் தேயு மாறுபோற்
    சீயசந் திரன்றவம் பெருக நாடொறுங்
    காயமுங் கசாயமுங் கரிச மானவே.

     (இ-ள்.) தூய - பரிசுத்தமாகிய, சந்திரன் - சந்திரனுடைய, கலை
- ஷோடச   கலைகளானவை,  நாடொறும் - தினந்தோறும், பெருக -
ஒவ்வொன்றாய்    விருத்தியாக,   தீய    -    பொல்லாத,   வன் -
வலிமைபொருந்திய,    காளகம்  - கறுப்புநிறமான நித்தியராகுவானது,
தேயுமாறுபோல்    -    தேய்வதுபோல, சீயசந்திரன் - ஸிம்மச்சந்திர
மஹாமுனிவருடைய,   தவம்    - தவமானது, பெருக - விருத்தியாக,
நாடொறும்  - நாள்தோறும்  (அதாவது :  நாளுக்கு நாள்), காயமும் -
சரீரமும், கசாயமும் - குரோதாதி கஷாய பரிணாமங்களும், கரிசமான -
க்ரசமாயின, (அதாவது : தேய்ந்து ஹீனமாயின), எ-று.          (90)

544. ஈற்றிலா ராதனை விதியி லேந்தறா
    னாற்றலுக் கேற்றவா றன்ன பானமுஞ்
    சாற்றிய வகையினாற் சுருக்கிச் சையமே
    லேற்றினான் றன்னைநின் றிலங்குஞ் சிந்தையான்.

     (இ-ள்.)(அவ்வாறானபின்) ஈற்றிலாராதனை விதியில் - (சதுர்வித
ஆராதனைகளில்)   கடைசியில்   சொல்லப்பட்ட    தபாராதனையின்
விதிப்பிரகாரம்,    ஏந்தல்    தான்   - பெருமையிற் சிறந்தவனாகிய
இம்முனிவன்,  ஆற்றலுக்கேற்றவாறு  - தன் சக்திக்குத்தக்க வண்ணம்,
அன்னபானமும்   - அன்னபானங்களை,      சாற்றியவகையினால் -
பரமாகமத்தில்   சொல்லப்பட்ட    விதம்போல், சுருக்கி  - குறைத்து,
நின்றிலங்கும்  - (தன்னுடைய ஆத்மபாவனையாகிய,  ஞானாராதனை,
தர்சனாராதனை,   சாரித்திராராதனை    யென்னும்  இக்குணங்களில்)
நிலைபெற்று     விளங்கும்படியான,    சிந்தையான்    - சுந்தாத்மத்
தியானத்தை   யுடையவனாய்,    தன்னை  - தன்னை, சையமேல் -
ஸம்மியங்களில்   மேலான   நிலையில், ஏற்றினான் - ஏற்றுவித்தான்,
(அதாவது : அவன் உத்க்ருஷ்ட ஸம்யமத்தை யுடையவனாய்ப் பிராணி
ஸம்யமம விஷய ஸம்யமங்களில் நிறைந்தான்), எ-று.            (91)

545. சித்தமெய் மொழிகளிற் செறிந்து யிர்க்கெலாம்
    மித்திர னாயபின் தேவ னாதியி
    லொத்தெழு மனத்தனா யுவகை யுள்ளுலாய்த்
    தத்துவத் தவத்தினாற் றனுவை வாட்டினான்.

     (இ-ள்.) (பின்பு) சித்தம் - மனத்தினாலும், மெய் - சரீரத்தாலும்,
மொழிகளில்   -   வசனங்களினாலும்,   செறிந்து    -   பொருந்தி,
உயிர்க்கெலாம் - த்ரஸஸ்தாவர