ஜீவன்கட் கெல்லாம், மித்திரனாயபின் - ஸ்நேகனான பாவனைசெய்த
பிறகு, வேதனாதியில் - ஸாதாஸாத தேவனீயோதய சுகதுக்கங்களில்,
ஒத்தெழு மனத்தனாய் - ஒருதன்மைத்தா யுண்டாகு மனமுடையவனாய்,
(அதாவது : ஹர்ஷவிஷாதமின்றி ஸமதாபரிணாமத்தனாகி), தத்துவத்
தவத்தினால் - தத்துவ ஸ்வரூபந்தெரிந்து உபாதேய தத்துவத்தினால்,
உவகையுள்ளுலாய் - மிகுதியான ஸந்தோஷபாவனை மனத்துள்
வியாபித்து, (அதாவது : நிஜஸ்வரூபருசிலக்ஷணமாகி), தனுவை -
சரீரத்தை, வாட்டினான் - சுஷ்கமாக்கினான், (அதாவது :
வாடச்செய்தான்), எ-று. (92)
546. திருந்தினார் தேய்வுகண் டெழும நீசர்போ
னரம்பெலா மெழுந்தன நல்ல மாந்தரி
லரங்கின நயனமுள் ளருந்த வக்கொடி
யிருந்தமை காட்டிநின் றிலங்கு நீரவே.
(இ-ள்.) (அவ்வாறாகவே) திருந்தினார் - திருத்தமான
குணமுடைய பெரியோர்களுடைய, தேய்வு - மெலிவை, கண்டு -
பார்த்து, எழும் - தலையெடுப்புப் பெற்றெழுகின்ற, அ - அந்த,
நீசர்போல் - கீழ்மக்களைப்போல், நரம்பெலாம் - (இம்முனிவனது
சரீரவாட்டத்தால்) நரம்புகளெல்லாம், எழுந்தன - மேலெழும்பித்
தெரிந்தன, நல்லமாந்தரின் - நல்ல மனிதர்களைப்போல், நயனம் -
(இம்முனிவரனது) கண்கள், அரங்கின - உள்ளழுந்திப் போயின,
(இதனால்) அருந்தவக்கொடி - அரிதாகிய தவக்கொடியானது,
உள்ளிருந்தமை - இனிப்பலனைத்தர உள்ளடங்கி யிருக்கப்பட்ட
நிலைமையை, காட்டி - சரீரமே காண்பித்து, இலங்கும் -
விளங்கும்படியான, நீர - குணத்தையுடையதாயிற்று, எ-று. (93)
547. தவத்தழ லெழுந்துயி ராம்பொற் றாதுவைத்
துவக்கறச் சுடச்சுடத் தோன்று நீரொளி
நிவத்தலா னின்றொளி துளும்பு மூர்த்தியா
னுவத்துலுங் காய்தலு மொருவி னானரோ.
(இ-ள்.) (அதன்மேல்) தவத்தழல் - ஆத்மத்தியானமாகிற
அக்கினியானது, எழுந்து - உண்டாகி, உயிராம் பொற்றாதுவை -
ஆத்மனாகிற ஸ்வர்ணதாதுவை, துவக்கற - களங்கமற (அதாவது :
விபாவமற), சுடச்சுட - தகித்துத் தகித்துப் புடம்போட, தோன்றும் -
(அதனால்) உண்டாகிய, நீர் - ஸ்வகுணமாகிற, ஒளி - ஜோதியானது,
நிவத்தலால் - பிரகாசித்தலால், நின்று - தன்னிலே நின்று,
ஒளிதுளும்பும் - ஜோதிததும்பும், மூர்த்தியான் - உருவத்தையுடைய
(அதாவது : சரீரமாத்திர பரிக்கிரகமுடைய) இம்முனி, உவத்தலும் -
யாதொரு விஷயத்தில் ஸந்தோஷித்தலும், காய்தலும் -
கோபித்தலுமாகிய, (ராக, த்வேஷங்களை), ஒருவினான் - நீங்கினான்,
எ-று. (94) |