548. தனுவது தனுவதாய்த் தனுவ தாயது
மனநிறை பொறைதவம் மகிழ்ச்சி யெய்துவ
நினைவது வினையினை நின்று திர்த்தது
முனிவனுந் தனதுமேற் கோளின் முற்றினான்.
(இ-ள்.) (பின்னர்) தனுவது - இம்முனிவரன் சரீரமானது,
தனுவதாய் சிறியதாகி (அதாவது : வாடி மெல்லியதாகி), தனுவதாயது -
க்ரசமாகப்பட்ட சரீரமாகியது, (அப்படிச் சரீரமெலிந்தும்), மனம் -
மனமானது, நிறை - நிறைவு பெற்ற, பொறை - க்ஷமையினாலும், தவம்
- அப்பியந்தர தபோபாவனையினாலும், மகிழ்ச்சியெய்துவ -
ஸந்தோஷ பாவனையோடு கூடியதாயிற்று, அந்நினைவது - அந்தத்
தபோத்தியான ஸம்மியக் ஞானபாவனையானது, நின்று - நிலைபெற்று,
வினையினை - மித்தியாத்துவாதி கர்மங்களை, உதிர்த்தது -
நிர்ஜரைசெய்தது, முனிவனும் - (இப்படிப்பட்ட ஸம்மியக்
ஞானபாவனையால்) இந்த ஸிம்மச்சந்திர முனிவரனும், தனது -
தன்னுடைய, மேற்கோளின் - மேலான கொள்கையாகிய
ஸ்வஸம்வேதன ஞானத்தைப் பெறும்படியான ஸம்மியக் சாரித்திரத்தில்,
முற்றினான் - பூர்த்திபெற்றான், (அதாவது : கஷாயோபசமனம்
செய்தான்) எ-று. (95)
549. எரியினுண் மூழ்கிய தென்ன தன்னதாய்ப்
பரிசையை வென்றவப் பரம மாமுனி
யருகனை யிருதய கமலத் துள்ளிரீஇத்
தெரிவருஞ் சித்தரைச் சென்னி சேர்த்தினான்.
(இ-ள்.) (பின்னர்) எரியினுள் - அக்கினியினுள்ளே, மூழ்கியது -
முழுகியது, என்னது - எத்தன்மையதோ, அன்னதாய் -
அத்தன்மையதாக, பரிசையை -
க்ஷுத்பிபாஸாதித்வாவிம்சதிபரீஷஹங்களை, வென்ற - ஆத்மத்தியான
பாவனா பலத்தால் ஜயித்த, அப்பரமமாமுனி - உத்கிருஷ்ட
தபஸையுடைய மேலான அந்த ஸிம்மச்சந்திர மஹாமுனி, அருகனை -
வீதராக சுத்தோப யோகனாகிய அருகத்பட்டாரகனை,
இருதயகமலத்துள் - தனது மனமாகிற தாமரை மலரில், இரீஇ -
இருத்தி, (அதாவது : ஸ்தாபித்து), தெரிவரும் - தெரிதற்கரிய, சித்தரை
- ஸித்தபரமேஷ்டியை, சென்னி - ஸிரஸில், சேர்த்தினான் -
தரித்தான், எ-று. (96)
550. சென்னியி லிடுங்கவ சத்தொ டத்திரம்
பன்னரும் மூவரும் பாங்கி னாயபின்
தன்னுடம் புயிரினைத் தடறு வாளென
வுன்னிநின் றைம்பத முன்னி யோதினான்.
(இ-ள்.) (அவ்வாறு சித்தரைச் சேர்த்ததாகிய) சென்னியில் -
சிரசில், இடும் - இடப்பட்ட, கவசத்தொடு - மேற்சட்டையோடு,
(அதாவது : தலைக்காவல்) |