(இ-ள்.)
உரகர்கோவே - தரணேந்திரனே!, என்று - என்று
அவ்விஷயங்களை விளக்கிக்காட்டி, அவர் - அத்தேவர்கள், உரைத்த
- சொல்லிய, மாற்றத்து - தர்ம
வசனத்தினாலே, எரியுறும் -
அக்கினியை யடைந்திளகிய, மெழுகு -
மெழுகானது, நீருள் -
ஜலத்தில், சென்றதுபோல் - அடைந்ததுபோல,
திண்ணென்று -
இந்தப்பாஸ்கரப் பிரபதேவன் மனம் கெட்டியாகி, இறைவன் - அருகத்
பரமேஸ்வரனை, நல் - நன்மையாகிய, சிறப்போடு - பூஜையோடு,
ஒன்றி - பொருந்தி, நின்ற - நிலைபெற்ற, நாள்
- ஆயுஷ்யநாள்,
உலப்ப - நீங்க, மின்னில் - மின்னற்கொடி - அத்திர்ச்யமாவதுபோல்,
நீங்கினான் - அவ்வுலகத்தை விட்டு
நீங்கியவனாகி, அன்றைய
நிதானத்தாலே - பூர்வத்தில் பண்ணப்பட்ட நிதான சல்லியத்தாலே,
அரிவையாய் - ஸ்த்ரீயாகி, நிலத்தைச் சேர்ந்தான் - பூமியில்
வந்து
அவதரித்தான், எ-று. (10)
571. காவலன் போலத் தீப சாகரஞ் சூழ நின்ற
நாவலந் தீவு தன்னுட் பரதத்து நடுவ ணோங்கிச்
சேவலன் னத்திற் சேடி சிறகினை விரித்துத் தீவை
மேவலுற் றெழுவ தொக்கும் விலங்கல்வே தண்ட முண்டே.
(இ-ள்.) தீபசாகரம்
- அஸங்கியாதத்வீபங்களும்
சமுத்திரங்களும், சூழ - தன்னைச் சூழும்படியாக, காவலன்போல -
இராஜாதிராஜனைப்போல, நின்ற - நடுவில்
நின்ற, நாவலந்
தீவுதன்னுள் - ஜம்பூத்வீபத்திலே, பரதத்துள் - பரதக்ஷேத்திரத்து
-
நடுவண் - மத்தியில், ஓங்கி - உயர்ந்து, சேவலன்னத்தில், ஒரு ஆண்
ஹம்ஸத்தைப் போல, சேடி - உத்தரபேஸ்ரீணதக்ஷிணபேஸ்ரீணிகளாகிற,
சிறகினை - சிறகுகளை, விரித்து -
விரித்துக்கொண்டு, தீவை -
இச்சம்பூத்வீபத்தை, மேவலுற்று - பொருந்தியதாகி, எழுவது - மேலே
எழுந்து போவதை, ஒக்கும் -
நிகர்க்கும், வேதண்டம் -
விஜயார்த்தமென்னும் பெயரையுடைய, விலங்கல் -
வெள்ளியம்
பெருமலையானது, உண்டு - உளது, எ-று. (11)
572. ஆழியைச் செறிந்து கண்ட மாறையு மடிப டுத்து
வேழமா நிரைகள் விண்ணோர் வேந்தவிஞ் சையர்கள் சூழ
வாழியங் கங்கை சிந்து வந்தடி யடைந்த குன்றம்
பாழியந் தடக்கை வேந்தன் பரதன்போன் றிலங்கு நின்றே.
(இ-ள்.) ஆழியை
- மஹாலவண சமுத்திரத்தை, செறிந்து -
பூர்வாபா பாகங்களில் சேர்ந்து, கண்டமாறையும்
- இப்பரத
க்ஷேத்திரத்திலுள்ள ஷட்கண்டங்களையும், அடிபடுத்து
- தன்
கீழ்ப்படுத்தி, வேழமாநிரைகள் - பெரிதாகிய யானைக் கூட்டங்களும்,
விண்ணோர் - தேவர்களும், வேந்தர் - அரசர்களும், விஞ்சையர்கள் -
வித்தியாதரர்களும், சூழ - தன்னைச்சூழ, ஆழி - ஸமுத்திரமும், அம்
- அழகிய, |