(இ-ள்.)
நின்ற - இவ்வண்ணமாகத் தென்வட பாரிசங்களில்
பத்துப் பத்து யோஜனை யகலம் வித்தியாதர லோகமாய் மீந்து நின்ற,
முப்பதும் - முப்பது யோஜனை
அகலமும், பத்தேறி - பத்து
யோஜனையுயர்ந்து, சென்றன - சென்றனவாய், நெறியினால் - முன்
சொன்ன கிரமத்தினால், சேடியாகி - இரு பக்கங்களிலும் பத்துப்பத்து
யோஜனை யகலமாகிய உத்தரதட்சிண பேஸ்ரீணிகளாகி, சக்கவாலர் -
சக்ரவாளரென்னும் பெயரையுடைய வியந்தரதேவர்களின், வியோகரம் -
மனோஹரங்களாகிய, புரங்களாகும் -
பட்டணங்கள் அந்த
ஸ்ரீணிகளிலாகும், அன்றி - அவையல்லாமல்,
அக்குன்றில் -
அவ்விஜயார்த்த பர்வதத்தில், பத்தும் -
மீந்த பத்து யோஜனை
யகலமும், ஐந்துயர் - ஐந்து யோஜனை
யுயர்ந்த, சூளியாம் -
சூளிகையாகும், மேல் - அந்தச் சூளிகையின் மேல், ஒன்றி நின்று -
பொருந்தி நின்று, ஒளிரும் - பிரகாசியாநின்ற, கூடம் - சிகரமானது,
மகுடம் போல - இராஜாக்களினுடைய சிரசில் சூட்டும் கீரிடம் போல,
ஒன்பதாம் - நவவிதங்களாகும், எ-று. (14)
575. இமையத்தி னிரும ருங்கும் நிலங்கள்போன் றிலங்கும் வெள்ளிச்
சிமையத்தி னிரும ருங்கும் சென்றவிஞ் சையர்கள்
சேடி
சமையத்து நான்க தாவ தொக்குமேற் றிழிவு தன்னின்
நமையொப்பர் விஞ்சை யாலிவ் விஞ்சையர் நாகர் கோவே.
(இ-ள்.) நாகர்கோவே
- தரணேந்திரனே!, இமையத்தின் -
இமையோத் கிரிபர்வதத்தினுடைய, இருமருங்கும்
- (உத்தர
தக்ஷிணமாகிய) இரண்டு பக்கங்களிலு மிராநின்ற, நிலங்கள் போன்று -
(பரதம் ஹைமவதமாகிய) நிலங்களைப் போல், வெள்ளிச் சிமையத்தின்
- வெள்ளி மலையாகிய விஜயார்த்த பர்வதத்தினுடைய, இருமருங்கும்
- இரண்டு பக்கங்களிலும், சென்ற -
விசாலமாகப் பரவிய,
விஞ்சையர்கள் - வித்தியாதரர்கள்
வசிக்கும்படியான, சேடி -
உத்தரதக்ஷிணபேஸ்ரீணிகளாகிய அடி நிலையில் உள்ள நகரங்களாகும்,
(இங்கு) ஏற்றிழிவு தன்னில் - உத்ஸர்ப்பிணி
அவஸர்ப்பிணி
காலங்களில், (ஏற்பட்டகாலமானது) சமையத்து நான்கதாவதொக்கும்
- நாலாங்காலத்துக்குச் சமானமாகவிருக்கும், விஞ்சையால்
-
வித்தைகளினால், (பார்க்கும்பட்சத்தில்), இவ்விஞ்சையர் - இங்குள்ள
வித்யாதரர்கள், நமையொப்பம் -
நமக்கு ஸமானமான
குணத்தையுடையவர்களாக இருப்பார்கள், எ-று. (15)
576. எழுமுழம் வில்லைஞ் ஞூற்றி லிழிவது மேற்று மில்லை
வழுவிலா வருட நூறு புவ்வகோ டியினிற் கீழ்மேல்
எழுமுழ மாயி ரத்தாண் டெண்பத்து நான்கு நிற்கும்
முழுவில்லைஞ் ஞூறு கோடா கோடிமூ வாறு முன்னீர். |