நீண்டிரா நின்ற, விழுது - விழுதுகளை,
ஈன்றது போன்ற - ஈன்றதை
நிகர்த்தனவாம், எ-று. (20)
581. மலைக்கண் வஞ்சியங் கொம்பன வின்சொலா
ரலத்த கஞ்செறிந் தஞ்சிலம் பாரடி
தலத்தெ ழுந்தசெந் தாமரைப் போதுபோ
னிலத்த கம்பொருந் திக்கி டந்தவே.
(இ-ள்.) மலைக்கண் - அவ்விஜயார்த்த
பர்வதத்தில், வஞ்சியங்
கொம்பன - வஞ்சிக்கொடியையும் அழகிய
பூங்கொம்பையும்
போன்றவர்களாகிய, இன்சொலார் -
இனிய சொல்லையுடைய
ஸ்த்ரீமார்களின், அலத்தகம் செறிந்த - செம்பஞ்சுக்குழம் பூட்டிய,
அம் - அழகிய, சிலம்பு - பாதச்சிலம்பு, ஆர் - பொருந்திய, அடி -
பாதச்சுவடுகள், தலத்து - பூமியில், எழுந்த - உண்டாகிய, செம்
-
சிவந்த, தாமரைப் போதுபோல் - தாமரைப்
புஷ்பங்கள்போல,
நிலத்தகம் - பூமியில், பொருந்தி - சேர்ந்து, கிடந்து விளங்குவனவாம்,
எ-று. (21)
582. பைம்பொ னன்பவ ழம்படி கம்மணி
யொன்ப தினொளி யுங்கலந் துள்ளுலாய்
வம்பு கொண்டு கிடந்தவை மால்வரை
யும்பர் கோன்வில் லுறங்குவ தொக்குமே.
(இ-ள்.) மால் -
பெருமையையுடைய, வரை - அவ்விஜயார்த்த
பர்வதத்தில், பைம் - பசுமையான, பொன்
- ஸ்வர்ண, நன் -
நன்மையாகிய, பவழம் - பவளங்கள், படிகம்
- ஸ்படிகங்கள்,
(முதலாகிய), ஒன்பதின் - நவரத்தினங்களினது, ஒளியும் - ஜோதியும்,
கலந்து - சேர்ந்து, உள் - உள்ளே, உலாய் - பரந்து, வம்பு கொண்டு
- புதுமைக்கொண்டு, கிடந்தவை - இருந்தவை,
உம்பர்கோன் -
தேவேந்திரனது, வில் - தனுஸாகிய இந்திர தனுஸுவானது, உறங்குவது
- வந்துறங்கியதை, ஒக்கும் - நிகர்ப்பனவாகும், எ-று. (22)
583. எறிசு றாவுயர்த் தானிடம் போன்றெழில்
வெறியு லாமலர்ப் பந்தரம் மெல்லணைச்
செறியும் விஞ்சையர் சேயிழை யாரொடுங்
குறைவி லாக்குரு வத்தவ ரொப்பரே.
(இ-ள்.) (இன்னும் அங்கு)
எறி - ஜலத்தில் மோதுகின்ற, சுறா -
ஆண் மகரமஸ்யத்தை, உயர்த்தான் -
துவஜத்தில்லாஞ்சனமாக
உடைய (அதாவது : மகரக்கொடியையுடைய)
மன்மதனது,
இடம்போன்று - ஸ்தானம் போன்று, எழில் - அழகிய,
வெறி -
வாசனையானது, உலாம் - பரந்து வீசும், மலர் - புஷ் |