270மேருமந்தர புராணம்  


 

பத்தாலாகிய, பந்தர் - பந்தல்களினுள், அம் - அழகிய, மெல்லணை -
மிருதுவாகிய   புஷ்பமெத்தைகளில்,   சேயிழையாரொடும்  -  சிவந்த
ஒளிவீசும்  இரத்தினாபாணங்களையணிந்த ஸ்த்ரீமார்களுடன், செறியும்
- சேர்ந்திராநின்ற,    விஞ்சையர்  -  வித்தியாதரர்கள்,  குறைவிலா -
போகங்களில்   குறைவில்லாத,   குருவத்தவர்  -  போக  பூமியாகிய
உத்தரகுருக்ஷேத்திரத்திலிராநின்ற       மனுஷ்யர்களை,    ஒப்பர் -
நிகர்ப்பார்கள், எ-று.                                     (23)

 584. கின்ன ரமிது னஞ்செய்த கீதமாய்ந்
     தின்ன ரம்பி னெழுந்த வெழால்வழி
     மின்னி னாடு மரம்பையர் மேவலாற்
     பொன்னு லகது போலுமோர் பாலெலாம்.

     (இ-ள்.)  ஓர்  பாலெலாம் - அம்மலையின் ஒரு பக்கமெல்லாம்,
கின்னர  மிதுனம்  -  கின்னர மிதுனங்கள், செய்த - பாடுதல் செய்த,
கீதம்  -  சங்கீதத்தை, ஆய்ந்து - ஆராய்ந்து, நரம்பின் - வீணையின்
நரம்புகளில், எழுந்த - உண்டாகிய, எழால் வழி - நாதத்தின் வழியே,
மின்னின்   -   மின்னற்   கொடிபோல,    ஆடும்   -   அசைந்து
நர்த்தனமாடுகின்ற,   அரம்பையர்  - நர்த்தனஸ்த்ரீகள்,  மேவலால் -
பொருந்தி நர்த்தனஞ்  செய்கின்றபடியால்,  பொன்னுலகது போலும் -
தேவருலகத்தை நிகர்க்கும், எ-று.                           (24)

 585. கோங்கு வாகை குடசங் குருந்துநல்
     வேங்கை சண்பகந் தண்பகம் பாடலம்
     வாங்கு வாழையுந் தாழையும் புன்னையும்
     பாங்கி னோங்கின பார்மிசை யில்லையே.

     (இ-ள்.) (இன்னும் அங்கே) கோங்கு - கோங்கு மரமும், வாகை
- காட்டு வாகையும்,  குடசம் - மலைமல்லிகையும்,  குருந்து - காட்டு
நாரத்தை காட்டெலு   மிச்சையும்,  நல் - நன்மையாகிய, வேங்கை -
வேங்கைமரமும்,   சண்பகம்  -  சண்பக   விருட்சமும், தண்பகம் -
தண்பகமென்னுமொரு   ஜாதிமரமும்,  பாடலம் - பாதிரி விருட்சமும்,
வாங்கு    -    வளைந்த     குலைகளையுடைய,     வாழையும் -
வாழைமரங்களும்,    தாழையும்   -  தாழை  மரமும், புன்னையும் -
புன்னைமரங்களும்,  பாங்கின் - வரிசையாக,   ஓங்கின - உயர்ந்திரா
நின்றனவாம்,   பார்மிசை  -  இப்பூமியின்மேல்,   இல்லை - இதற்கு
உவமை இல்லை - எ-று.                                  (25)

 586. கள்ளு மிழ்ந்தல ருங்கழு நீர்ச்சுனை
     புள்ளொ லிப்பவண் டார்த்தெழும் பூம்பொய்கை
     வெள்ள மார்ந்துழ வின்றி விளைவய
     லுள்ள வண்ண முரைத்தற் கரியவே.