மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 271


 

     (இ-ள்.) (இன்னும்  அவ்விடத்தில்)  கள் - மதுவை, உமிழ்ந்து -
சொரிந்து,  அலரும் - மலரும்,  கழுநீர் - கழுநீர்ப்புட்பங்களையுடைய,
சுனை - சுனைகளும்,   புள் - பட்சிகள், ஒலிப்ப - சப்திக்க, வண்டு -
வண்டுகளும்,   ஆர்த்தெழும்  -  சப்தித்தெழுகின்ற,  பூம்பொய்கை -
புஷ்ப தடாகங்களும்,   வெள்ள   மார்ந்து - ஜலப்பெருக்கு நிறைந்து,
உழவின்றி  -  உழவுத்  தொழிலில்லாமல், விளை - தாமாக விளைந்து
பலனைத்தருகிற,   வயல் - வயல்களும்,   உள்ள வண்ணம் - தங்கள்
யதாஸ்வரூபங்களை,   உரைத்தற்கு - அவ்விதமாகவே வர்ணிப்பதற்கு,
அரிய - அருமையானவையாம், எ-று.                        (26)

வேறு.

 587. மற்றிந்த மலைமிசை வடதென் சேடியிற்
     கொற்றவ ருறைபதி கோடி யூர்களாற்
     சுற்றப்பட் டிருந்தவை நூற்றொ ருபதிற்
     றெற்கொரு புரிநல தரணி திலகமே.

     (இ-ள்.) மற்று - பின்னை, இந்த மலைமிசை - இந்த விஜயார்த்த
பர்வதத்தின்மே  லிராநின்ற,  வடதென் சேடியில்  - முதனிலையாகிய
உத்தரதக்ஷிண   பேஸ்ரீணிகளில், கோடியூர்களால் - கோடிக்கணக்கான
அநேக           கிராமங்களினால்,        சுற்றப்பட்டிருந்தவை -
சூழ்ந்திராநின்றனவாகிய, கொற்றவர் - வித்தியாதர ராஜாக்கள், உறை -
தங்கியிராநின்ற,     பதி   -  இராஜதானியாகிய,   நூற்றொருபதில் -
நூற்றுப்பத்துப் பிரதான பட்டணங்களில், தெற்கு - தக்ஷிணபேஸ்ரீணியில்,
நல   -   நன்மையாகிய,   தரணி   திலகம் - தரணீ திலகமென்னும்
பெயரையுடைய பட்டணமானது, ஒருபுரி - ஒரு நரகமாம், எ-று.   (27)

 588. கொடிமிடை கோபுர வீதி வாயெலாம்
     வடிவுடை மகளிரும் மைந்த ரும்மலிந்
     தடியிடு மிடம்பெறா தடையும் மாநகர்
     கடலிடை நதிபுகுங் காட்சித் தாகுமே.

     (இ-ள்.)   கொடி   -   துவஜக்கொடிகள்,  மிடை - நெருங்கிச்
சேர்ந்த,   கோபுரம் - கோபுரங்களையுடைய, வீதிவாயெலாம் - மஹா
வீதிகளிலெவ்விடங்களிலும்,   வடிவுடை  -  நல்ல உருவத்தையுடைய,
மகளிரும்  - ஸ்த்ரீமார்களும்,   மைந்தரும் - புருடர்களும், மலிந்து -
நிறைந்து, அடி - பாதங்களை,  இடும் - பெயர்த்து வைக்கும், இடம் -
இடத்தை,    பெறாது   -   அடையாமல்,  அடையும்  - நெருங்கிச்
செல்கின்ற,     மாநகர்     -     பெரிதாகிய    ஜனஸமூகமுடைய
அப்பட்டணமானது,   (இவ்வித   ஜன நெருக்கத்தின் ஆரவாரத்தால்),
கடலிடை   -   சமுத்திரத்தில்,   நதிபுகும் - பல  நதிகள் அடையும்,
காட்சித்தாகும் - தோற்றத்தையுடையதாகும், எ-று.