591. மழையுண் மின்னென மாளிகை யூடுலா
முழைய னார்புரு வத்துரு வச்சிலை
குழைய வாங்கி விடுங்கணம் புள்புக
வழலுங் கவ்வை யமர்ந்ததங் கோரொர்பால்.
(இ-ள்.) (மேலும்)
அங்கு - அந்நகரத்தில், ஓரொர்பால் -
ஒவ்வோரிடங்களிலும், மழையுள் - மேகத்துள் பொருந்திய, மின்னென
- மின்னற் கொடிபோல,
மாளிகை யூடுலாம் -
மாளிகைகளிலுலாவுகின்ற, உழையனார் - பெட்டைமானைப் போல
மருண்ட பார்வையுடைய மாதர்கள், புருவம்
- தங்களுடைய
புருவங்களாகிற, உருவம் - ரூபம் பொருந்திய, சிலை
- வில்லை,
குழைய - வளையும்படியாக, வாங்கி நெற்றியிலேறிட வளைத்து, விடும்
- அந்த வில்லினின்றும் விடப்பட்ட, கண் - தங்கள் கண்களாகிற,
அம்பு - அம்புகளானவை, உள்புக - மைந்தர்களுடைய
மனதில்
தைத்துக்கொள்ள, அழலும் - அதனால்
அவர்கள் வெதும்பி
வருத்தமடைகின்ற, கவ்வை -
துன்பமானது, அமர்ந்தது -
பொருந்தியதாகும்,
புருவத்து என்பதில் அத்து - சாரியை.
(31)
592. மதிய டைந்த நெடுங்கொடி மாடவூர்க்
கதிபன் விஞ்சையர் கோனதி வேகனாம்
நிதியி ரண்டென நீடிய தோளினான்
விதியின் விஞ்சை கடந்த நெடுந்தகை.
(இ-ள்.) மதியடைந்த
- சந்திரனிடத்தில் சேர்ந்த, (அதாவது :
சந்திர மண்டலம்வரை அளாவிய), நெடும் -
நீண்ட, கொடி -
த்வஜங்கள்பொருந்திய, மாடம் - உப்பரிகைகளையுடைய, ஊர்க்கு
-
அத்தரணீதிலக புரத்துக்கு, அதிபன்
- அதிபதியானவன்,
விஞ்சையர்கோன் - வித்தியாதரர்களுக் கெல்லாம் ராஜாவாகியவனும்,
நிதியிரண்டென -
சங்கநிதி பத்மநிதிபோல
(தியாகங்கொடுக்கும்படியான), நீடிய - பெரியனவாகிய, தோளினான்
- கைகளை யுடையவனும், விதியின் - விதிக் கிரமத்தால்,
விஞ்சை
- வித்தைகளை யெல்லாம், கடந்த - கரைகண்ட, நெடுந்தகை
-
பெரிதாகிய குணத்தை யுடையவனும், (ஆகிய) அதிவேகனாம்
-
அதிவேகனென்னும் பெயரினையுடையவனாவான், எ-று.
(32)
வேறு.
593. விலக்கிலா விழுநிதி வென்றி யாயுவா
மிலக்கண மியாவையு மிருந்த கொம்பனாள்
சுலக்கணை யாம்பெயர் துனார்க டோள்வலி
விலக்கிய புயத்ததி வேகன் றேவியே. |