(இ-ள்.)
துனார்கள் - சத்துரு ராஜாக்களுடைய, தோள்வலி -
புஜபலத்தை, விலக்கிய - நீக்கிய, புயத்து -
புஜபலத்தையுடைய,
அதிவேகன் - அதிவேக ராஜனுடைய, தேவி - பட்டத்தரசியானவள்,
விலக்கிலா - நீங்காத, விழு - பரிசுத்தமாகிய, நிதி - ஐஸ்வரியமும்,
வென்றி - வெற்றியும், ஆயு - உத்கிருஷ்டமாகிய
ஆயுஷ்யமும்,
ஆம் - ஆகின்ற, இலக்கணம் - லக்ஷணங்களும், (ஆகிய) யாவையும்
- முழுமையும், இருந்த - நிறைந்திருந்த, கொம்பனாள் - புஷ்பக்கொடி
போன்றவள், பெயர் - அவளுடைய நாமமானது, சுலக்கணையாம் -
ஸுலக்ஷணையென்பதாகும், எ-று. (33)
594. பருதியின் னொளியளாம் பாவை தானவள்
வருசிலைத் திருநுதன் மாம டந்தைபாற்
றிருவெனத் தோன்றினாள் சீத ரையதாம்
மருவிய பொருள்வழி வந்த நாமமே.
(இ-ள்.) பரிதியின்
- சூரியன்போல, ஒளியளாம் - ஜோதியை
வீசுகின்றவளாகிய, பாவைதானவள் - பூர்வம் ராமதத்தையாகிப் பின்னர்
பாஸ்கரப் பிரப தேவனான
அப்பெண்ணானவள், வரு -
கைக்குவளைக்க இசைந்து வருகின்ற, சிலை - வில்லைப்போன்ற, திரு
- அழகிய, நுதல் - நெற்றியையுடைய,
மாமடந்தை பால் -
பெருமைபொருந்திய அந்த சுலக்ஷணை யென்னும்
பெண்ணின்
கருப்பத்திலடைந்து, திருவென -
(நவமாத பரிபூர்ணமானபின்)
இலக்குமிபோல், தோன்றினாள் - பெண்ணாகப் பிறந்தாள், பொருள் -
அப்போது மிகுதியான ஐஸ்வரியமானது, மருவிய - சேர்ந்த, வழி -
காரணமாக, வந்த - அவளுக்கேற்பட்ட, நாமம்
- பெயரானது,
சீதரையதாம் - ஸ்ரீ தரையென்பதாகும், எ-று. (34)
595. கொற்றவ னாங்குல மலையிற் றோன்றிய
கற்புடைச் சுலக்கணைக் கனகப் பாத்தியுட்
கற்பகக் கொடியது வளர்ந்து காமரும்
பொற்புடை முலையரும் பெழுந்து பூத்தவே.
(இ-ள்.) கொற்றவனாம்
- அதிவேகனென்னும் ராஜாவாகிற,
குலமலையுள் - குல பர்வதத்தில், தோன்றிய - உண்டாகிய, கற்புடை
- பதிவிரதா குணமுடைய, சுலக்கணை -
சுலக்ஷணையென்னும்
பெயரையுடைய தேவியாகிற,
கனகப் பாத்தியுள் -
ஸ்வர்ணப்பாத்தியுள், கற்பகக்கொடியது -
ஸ்ரீதரையென்கிற
கல்பகவல்லிக் கொடியானது, வளர்ந்து - வளர்ச்சியுற்று, காமரும்
-
இச்சிக்கத் தகுந்த, பொற்புடை - அழகையுடைய, முலையரும்பு
-
ஸ்தனங்களாகிற அரும்புகளானவை, எழுந்து - உண்டாகி, பூத்த
-
அதனிடத்தே புஷ்பித்தன, எ-று.
இதனால் ஸ்ரீதரை
யென்பவள் யௌவன மடைந்தாளென்பது
பெறப்படும். (35)
|