(இ-ள்.)
இறை - உயர்ச்சிபெற்ற அல்லது இரேகைகளையுடைய,
வளை - வளையல்களை யணிந்த, இராமை - இராமதத்தை, தன் -
தன்னுடைய, இளைய காளை - இளைய குமாரனாகிய பூர்ணச்சந்திரன்,
மேல் பிறவியில் - இதன்மேல் வரும் பிறவிகளில்,
என் வயின் -
எனது கருப்பத்தில், பிறக்குமாய்விடின் - பிறப்பானேயானால், (அது),
நிறை - நிறைவு பெற்ற, தவப்பயன் -
என்னுடைய தவத்தின்
பயனாகும், (ஆதலின் நான் தவஞ்செய்தவளாயிருப்பின் அவ்வாறே
அவன் பிறப்பானாக), எனா - என்று, நினைத்த - அவள் எண்ணிய,
சிந்தையின் - நிதான சல்லிய சிந்தையினால், மறுவிலா - குற்றமில்லாத,
திருவனாள் - இலக்குமி போன்றவளாகிய அச்சீதரையினுடைய,
வயிற்றுள் - கருப்பத்திலடைந்து,
தோன்றினான் - முன்னே
பூர்ணச்சந்திரனாகவிருந்த வைடூரியப் பிரபதேவன்
பெண்ணாய்
அவதரித்தான், எ-று. (38)
599. மங்கையாய் மைந்தனாய் வானிற் றேவனாய்
மங்கையாய் வைடூரியப் பிரபன் றோன்றினான்
இங்கிது மாற்றின தியல்பி சோதரை
செங்கய னெடுங்கணத் திருவி னாமமே.
(இ-ள்.) மங்கையாய்
- முன்னே வாருணியென்கிற பிராம்மண
மங்கையாயிருந்து, மைந்தனாய் - பிறகு பூர்ணச்சந்திரனென்னு
மரசகுமாரனாகி, வானில் - பிறகு சுக்கிரகல்பத்தில்,
தேவனாய் -
தேவனாகி, மங்கையாய் - இப்போது ஸ்ரீ தரைக்குப்
புதல்வியாகி,
வைடூரியப் பிரபன் - வைடூரியப் பிரபதேவன், தோன்றினான்
-
பிறந்தான், மாற்றினது - ஸம்சாரத்தினது, இயல்பு - ஸ்வரூபமானது,
இங்கு - இவ்விடத்தில், இது - இதுவாகும், செம் - சிவந்த, கயல் -
கெண்டை மத்ஸ்யம் போன்ற, நெடும் -
நீண்ட, கண் -
கண்களையுடைய, அத்திருவின் நாமம் -
இலக்குமிபோன்ற
அழகுடைய வப்புதல்வியின் பெயரானது, இசோதரை - யசோதரை
யென்பதாகும், எ-று.
(39)
600. அங்கையு மடிகளு மலர்ந்த தாமரை
கொங்கையுங் குழல்களுங் குரும்பை கொன்றையாம்
வெங்கயற் பொருவகண் வேயை வென்றதோள்
பங்கய மலர்மிசைப் பாவை பாவையே.
(இ-ள்.) பாவை -
சித்திரப்பாவை போன்ற யசோதரையின்,
அங்கையும் - அகங்கையும், அடிகளும் - பாதங்களும், அலர்ந்த -
மலர்ந்த, தாமரை - தாமரை மலர்களாம்,
கொங்கையும் -
ஸ்தனங்களும், குழல்களும், கூந்தலின் ஐந்து
பகுப்புக்களும்,
குரும்பை கொன்றையாம் - கிரமமாகத் தென்னங் குரும்பையும்
கொன்றைக்காயுமாம், (அதாவது : தனங்கள் குரும்பையும் ஐம்பால்
கொன்றைக்காயுமாம்), |