மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 277


 

கண் - நேத்திரங்கள்,  வெம் - வெவ்விய,  கயல் - கெண்டை மீனை,
பொருவ  -  ஒத்திருப்பவைகளாம்,   தோள் - தோள்கள்,  வேயை -
மூங்கிலை, வென்ற - ஜெயித்தனவாம், பாவை - அந்தப்பெண், பங்கய
மலர்மிசை - தாமரைப்   புஷ்பத்தின்   மேல்  வசிக்கின்ற,  பாவை -
இலக்குமிதேவியேயாவள், எ-று.

     பாவை - இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.                (40)

 601. மேகர வத்தொடு மிடைந்த பேரொலிப்
     பாகரப் புரத்தவ ரிறைவன் பாரொடு
     நாகர்தம் மிடத்தையும் நடுக்கும் விஞ்சைகட்
     காகரன் சூரியா வருத்த னாகுமே.

     (இ-ள்.)  (இது  நிற்க)  மேகரவத்தொடு - மேக கர்ஜனையோடு,
மிடைந்த   -   சேர்ந்த,   பேரொலி - பெரிதாகிய, சப்தத்தையுடைய,
(அதாவது : மேககர் ஜனையை நிகர்த்த), பாகரப்புரத்தவர் - பாஸ்கரப்
புரத்திலுள்ளவர்களுக்கு,   இறைவன் - இராஜாவாகியவன், பாரொடு -
இந்தப்   பூமியோடு,    நாகர்   தம்மிடத்தையும்    -   வித்தியாதர
லோகத்தையும்,  நடுக்கும்  -  பயத்தால் நடுங்கப்  பண்ணும்படியான,
விஞ்சைகட்கு  -  வித்தைகளுக்கு, ஆகரன் - இருப்பிடமானவனாகிய,
சூரியா     வருத்தன்      ஆகும்     -    சூர்யாவர்த்தனென்னும்
பெயரையுடையவனாவான், எ-று.                            (41)

 602. நிறைமதி யனையமுக் குடையி னீழலி
     னிறைவன திருந்தடி யிருந்த சிந்தையான்
     பொறிகடம் புலங்கண்மேன் மிக்க போழ்தினும்
     நெறியலா நெறிச்செலா னீதி யானவன்.

     (இ-ள்.) நீதியானவன் - நீதியை  மிகவுமுடைத்தாகிய அச்சூரியா
வருத்தன், நிறை - நிறைந்த, மதியனைய - சந்திரனுக்குச் சமானமாகிய,
முக்குடையினீழலின் - சுவேத சத்திரத்தினது நிழலிலமைந்த, இறைவன
- அருக   பரமனுடைய,   திருந்தடி - செவ்வையாகிய  பாதங்களில்,
இருந்த - சேர்ந்த,   சிந்தையான்   -   மனமுடையவன் (அதாவது :
அருகத்பக்தியே மிகுந்தவன்),  பொறிகள் - பஞ்சேந்திரியங்கள், தம் -
தங்களுடைய,    புலங்கண்மேல்    -   விஷயங்களின்மேல்,  மிக்க
போழ்தினும்  -  மிகுதியாகச்  சென்ற  காலத்திலும், நெறியலாநெறி -
நன்மார்க்கமல்லாத  கெட்ட  மார்க்கத்தில்   (அதாவது : அநீதியாகிய
துர்விஷயங்களில்),    செலான்  -  செல்லாத   இயல்பையுடையவன்,
எ-று.                                                  (42)

 603. ஆற்றன்மூன் றான்மலை யரசர் தம்வலி
     மாற்றிய புயவலி மற்ற மங்கைதன்