னேற்றிய வடஞ்சுமந் தெழுந்த கொங்கையை
யாற்றுளி வேள்வியா லண்ண லெய்தினான்.
(இ-ள்.) ஆற்றல்
மூன்றால் - (உத்ஸாக சக்தி பிரபுசக்தி
வித்தியா சக்தியாகிய) த்ரிசக்திகளால், மலை
- அவ்விஜயார்த்த
பர்வதத்திலுள்ள, அரசர் தம் -
பகையரசர்களுடைய, வலி -
பராக்கிரமத்தை, மாற்றிய - கெடுத்த, புயவலி - புஜபலத்தையுடைய,
அண்ணல் - ஸ்ரீஷ்டனாகிய இந்தச் சூரியாவர்த்த
மஹாராஜன்,
மங்கை தன் - (அளகா புராதிபதியாகிய தர்சகனுக்கும் அவன்றேவி
ஸ்ரீ தரைக்கும் புத்ரியாகிய யசோதரை யென்னும்) பெண்ணின், ஏற்றிய
- மேலே சேர்க்கப்பட்ட, வடம் -
முத்துமாலையை, சுமந்து -
அணிந்து, எழுந்த - மார்பினிடமாக உண்டாகிய, கொங்கையை
-
ஸ்தனங்களிலுண்டாகிய போகத்தை, ஆற்றுள் - தர்மசாஸ்திர நெறியில்
பொருந்திய, வேள்வியால் - ஒளபாஸன விதிக்கிரமத்தால், எய்தினான்
- விவாஹ பூர்வகமாக அடைந்தான், எ-று.
ஆற்றுளி என்பதில் இ - சாரியை.
(43)
604. ஆரியா வருத்தத்துள் ளாரைப் போலவச்
சூரியா வருத்தனுந் தோகை தன்னலம்
வாரியா வருத்தத்துள் ளமிழ்தின் வாங்கிய
தாரியான் பருகுநாட் சாச ரத்தினுள்.
(இ-ள்-) ஆரியாவருத்தத்து
- ஆரியா வருத்தமென்கிற உத்தம
போக பூமியில், உள்ளாரைப்போல -
இராநின்ற போகபூமி
மனுஷ்யர்களைப்போல, தாரியான் - மாலையை யணிந்தவனாகிய,
அச்சூரியாவருத்தனும் - அந்தச் சூர்யாவர்த்த
மஹாராஜனும்,
தோகைதன் - யசோதரையினிடமாகிய, நலம் - இன்பத்தை, வாரியா
வருத்தத்துள் - க்ஷீரசமுத்திரத்தின் சுழற்சியிலுண்டாகிய, அமிழ்தின் -
அமிர்தத்தைப்போல, வாங்கி -
கிரகித்து, பருகுநாள் -
அனுபவிக்கின்ற காலத்தில்,
சாசரத்தினுள் - ஹைஸ்ரார
கல்பத்திலிராநின்ற, எ-று.
(44)
605. காமருந் தேவியர் வதனத் தாமரைத்
தேமரு வண்டெனச் செங்கட் சீதர
னாமத யானைசா சாரத் தின்வழீ இப்
பூமரு குழலிதன் புதல்வ னாயினான்.
(இ-ள்.) காமரும்
- இச்சிக்கத்தகுந்த,
தேவியர் -
தேவிமார்களின், வதனம் - முகமாகிற, தாமரை - தாமரைப்புஷ்பத்தில்,
வண்டென - வண்டுபோல (சேர்ந்து), தேம்மரு - இனிமையையடைந்த,
செம் - சிவந்த, கண் - கண்களையுடைய, சீதரனாம் மத யானை -
பூர்வம் மதயானையாயிருந்த ஸ்ரீதரதேவன், சாசாரத்தின்
- அந்த
ஸஹஸ்ரார கல்பத்தினின்றும், வழீஇ - ஆயுராவஸானத்தில் |