நழுவி, பூமரு - பொலிவு பெற்ற,
குழலிதன் - அளகத்தையுடைய
யசோதரையின், புதல்வனாயினான் - புத்திரனாகி
யவதரித்தான்,
எ-று. (45)
606. சீதர னிசோதரைச் சிறுவ னாய்மண்ணிற்
கேதமாந் திமிர்கெடக் கிரண வேகனாய்
மாதிரந் தன்னையும் வணக்கும் விஞ்சையா
லோதநீர் வட்டத்தி னொருவ னாயினான்.
(இ-ள்.) சீதரன்
- (மேற்கூறிய) ஸ்ரீதரதேவனானவான்,
(முன்னுரைத்தபடி), யசோதரை - யசோதரையினுடைய, சிறுவனாய் -
குமாரனாகி, மண்ணில் - இப்பூமியிலுண்டாகிய யாசக ஜனங்களுடைய,
கேதமாம் - தரித்திர துன்பமாகிற, திமிர் - அந்த காரமானது, கெட -
நீங்க, கிரணவேகனாய் -
கிரணவேகனென்னும்
பெயரையுடையவனாய், மாதிரந்தன்னையும் - இப்பூமி முழுமையும்,
வணக்கும் - வசப்படுத்தும்படியான, விஞ்சையால் - வித்தைகளினால்,
ஓதநீர் வட்டத்தில் -
ஸமுத்திரஜலஞ் சூழ்ந்த இப்பூமியில்,
ஒருவனாயினான் - ஒப்பற்றவனானான், எ-று. (46)
607. குஞ்சிகள் கருவளைச் சுருளின் கொத்தன
மஞ்சிலா மதியின தியற்கை வாண்முகங்
குஞ்சரத் தடக்கைத்திண் புயங்கண் மார்பகம்
பஞ்சின் மெல் லணைநல பதுமைக் கென்பவே.
(இ-ள்.)
குஞ்சிகள் - அக்கிரணவேகனுடைய தலைமயிர்கள்,
கருவளைச் சுருளின் கொத்தன - கருத்த வளையல் சுருள்களின்
கொத்துகளுக்கொப்பாகும், வாள் - ஒளிபெற்ற, முகம் - முகமானது,
மஞ்சிலா - களங்கமில்லாத, மதியினது - சந்திரனுடைய, இயற்கை -
ஸ்வரூபத்தை உடையதாகும், திண் - கெட்டியாகிய, புயங்கள்
-
கைகள், குஞ்சரத்தடக்கை, யானைத் துதிக்கையாகும், மார்பகம்
-
மார்பானது, நல் - நன்மையாகிய, பதுமைக்கு
- இலக்குமிதேவி
தங்கியிருப்பதற்கு, பஞ்சின் - பஞ்சினாலாகிய, மெல் - மிருதுவாகிய,
அணை - மெத்தையாம், என்ப - என்று அறிந்தோர் கூறுவார்கள்,
எ-று. (47)
608. இடையரி யேற்றின திடையவ் வேந்தறன்
துடைகணன் மாளிகைத் தூண்கள் போலுமே
நடைவிடை யொதுக்கமா நளினங் காலடி
யடையலர்க் கரியொடு கூற்ற மன்னனே.
(இ-ள்.) (இன்னும்)
அவ்வேந்தல் தன் - பெருமையிற் சிறந்த
அக்கிரண வேகனுடைய, இடை - இடையானது, அரியேற்றினது -
ஆண சிம்மத்தி |