(இ-ள்.)
(அவ்வாறு கேட்டபோது அம்முனிவரன்),
ஞானகாட்சியாவரணம் - ஞானாவரணீயம் தர்சனாவரணீயமென்னு
மிரண்டு கருமங்களும், அறிவொடு - ஞானத்தொடு, ஆலோகந்தன்னை
- தர்சனத்தையும், ஆர் -
நிறைந்த, இருள்போல - அந்த
காரத்தைப்போல, நின்று - நிலைபெற்று, மறுதலை - மறைப்பதை,
செய்யும் - உண்டுபண்ணும், தீயநல்வேதனீயம் - அசாதவேதனீயம்
சாதவேதனீய மென்னும் இரண்டு
கர்மங்களும், வாளின் -
வாளாயுதத்தினுடைய, எறியும் - சேதிக்கும்படியான, வாயிரண்டின் -
இரண்டு விதமான வாய்களில், ஒன்றில் -
ஒன்றிலே, நஞ்சு -
விஷத்தையும், ஒன்றில் - மற்றொரு வாயிலே,
அமிர்தம் -
அமிர்தத்தையும், பூசி -
தடவி, நா - நாவிலே, செறிய -
சேரும்படியாக, வைத்தல் - வைத்ததை, ஒக்கும் - நிகர்ப்பனவாம்,
எ-று.
(53)
614. மத்தத்தின் மயக்கு மோகம் வான்றளைப் போலு மாயச்
சித்திரக் காரி நாமஞ் சிறுமையும் பெருமை யுஞ்செய்
கொத்திரங் குலால னொக்கும் பொருளினைக் கொளாமற் காக்க
வைத்தவன் போலு மந்த ராயங்கண் மன்ன வென்றான்.
(இ-ள்.) மன்ன -
அரசனே!, மோகம் - மோகனீய கர்மமானது,
மத்தத்தின் - பைத்தியம் பிடித்ததுபோல, மயக்கும் -
மயக்கத்தை
உண்டு பண்ணும், ஆயு - ஆயுஷ்ய கர்மமானது, வான் - பெரிதாகிய,
தளைப்போலும் - விலங்குக்குச் சமானமாகும்,
நாமம் -
நாமகர்மமானது, சித்திரக்காரி -
(பல உருவங்களை எழுதும்)
சித்திரக்காரியாகும் (அதாவது : பல உருவங்களை
யெழுதும்
சித்திரக்காரிபோலப் பல உருவங்களைச் செய்யும்),
கொத்திரம் -
கோத்திர கர்மமானது, சிறுமையும் - சிறியனவும்,
பெருமையும் -
பெரியனவும், (ஆகிய பாண்டங்களை), செய்
- செய்கின்ற,
குலாலனொக்கும் - குயவனுக்குச் சமானமாக
உச்சநீசக்
கோத்திரங்களைப் பண்ணும், அந்தராயம் - அந்தராய கர்மமானது,
பொருளினை - திரவியத்தை,
கொளாமல் - எவரும்
கைக்கொள்ளாமல், காக்க - காவல்செய்ய, வைத்தவன்
போலும்
- வைக்கப்பட்ட காவற்காரனுக்குச் சமானமாகும், என்றான் - என்று
அம்முனிவரன் சொன்னான், எ-று.
கோத்திரம் - முதல் குறுகியது. கள்
- அசை. (54)
615. முடிவிலாக் கொடுமைத் தாய மோகந்தான் முன்ன மில்லாக்
கடியதீ வினைக ளெல்லாங் கட்டவே தானுங் கட்டுங்
கெடுவழி தான்கெ டாமுன் கேடெந்த வினைக்கு மொட்டா
தடுதலுக் கரிய மோக மரசனாம் வினைகட் கென்றான்.
(இ-ள்.) முடிவிலா
- அளவில்லாத, கொடுமைத்தாய -
பொல்லாங்குடையதாகிய, மோகந்தான் - மோகனீயகர்மமானது,
முன்னமில்லா - அனாதியாகிய, |