கடிய -
பொல்லாங்கான, தீவினைகளெல்லாம்
-
பாபவினைகளெல்லாம், கட்ட - பந்திக்க, தானும் - அம்மோகனீயமும்,
கட்டும் - சேர்ந்து பந்திக்கும், கெடுவழி - கெடுகின்றவழி, தான் கெடா
முன் - தான் கெடாததற்கு முந்தி, எந்த வினைக்கும் - மற்றெந்தக்
கர்மத்திற்கும், கேடு - கெடுகையை, ஒட்டா - செய்யவொட்டாது,
மோகம் - அப்படிப்பட்ட மோகனீய கர்மமானது,
அடுதலுக்கு -
ஜெயித்தற்கு, அரிய - மிகவுமருமையானது,
வினைகட்கு -
கர்மங்கட்கெல்லாம், அரசனாம் - ராஜாவாகும், என்றான் - என்றும்
சொன்னான், எ-று. (55)
616. மதியினா லார்வஞ் செற்ற மயக்கத்தான் வினைய வற்றாற்
கதிகளுட் கழுமக் காய மாறிலொன் றாமக் காயம்
பொதியவைம் பொறியை யாக்கும் பொறிகளாற் புலத்தை மேவி
விதியினாம் வேட்கை செற்ற மீட்டுமச் சுழற்றி
யாமே.
(இ-ள்.) (அவ்வாறு
சொல்லிப் பின்னரும்), மதியினால் -
அஞ்ஞானத்தாலும், ஆர்வம் - ராகமும், செற்றம் - த்வேஷமுமாகிய,
மயக்கத்தான் - மயக்கத்தினாலும்,
வினை - வகர்மங்கள்,
(ஆசிரவிக்கும்), அவற்றால் -
அவற்றினால், கதிகளுள் -
சதுர்கதிகளில், கழும - பொருந்த, காயமாறிலொன்றாம் - ஷட்ஜீவனி
காயங்களிலொன்றுண்டாகும், அக்காயம் பொதிய - அப்படிப்பட்ட
காயம் சேர, ஐம்பொறியையாக்கும் -
பஞ்சேந்திரியங்களை
யுண்டாக்கும், (அதாவது : மேற்கூறிய காயங்களில் ஒவ்வொன்றுக்கும்
ஏற்பட்டபடி பஞ்சேந்திரியங்களில் ஒன்றோ இரண்டோ
மூன்றோ
நான்கோ ஐந்தோ உண்டு பண்ணும்),
பொறிகளால் -
அவ்விந்திரியங்களால், புலத்தை - விஷயங்களை, மேவி - பொருந்தி,
விதியின் - கிரமத்தால், வேட்கை - ராகமும், செற்றம் - த்வேஷமும்,
ஆம் - உண்டாகும், மீட்டும் -
அதனால் மறுபடியும்,
அச்சுழற்றியாம் - முன் சொன்ன சதுர்கதி சுழற்சியாகும், எ-று. (56)
617. பரியட்ட மிதனை வெல்வார் பான்மையார் பான்மை யில்லார்
திரிவட்டம் போல நான்கு கதிகளுட் டிரிவ ரென்னக்
கிரியட்ட விறைமை தன்னைக் கிரணவே கன்கண் வைத்துப்
பொறியொக்கப் போகம் விட்டுப் புரவலன் முனிவனானான்.
(இ-ள்.) பான்மையார்
- பவ்வியத்துவத்தை யடைந்தவர்கள்,
பரியட்ட மிதனை - இந்தப் பரிவர்த்தனாரூபத்தை,
வெல்வார் -
ஜெயித்து ஸ்வரூபத்தையடைவார்கள்,
பான்மையில்லார் -
பவ்வியத்துவத்தை யடையாதவர்கள், திரிவட்டம் போல - வட்டமாகச்
சுழலும் இயந்திரத்தைப்போல, நான்கு கதிகளுள் - சதுர் கதிகளில்,
திரிவர் - பிறந்து மிறந்தும் சுழலுவார்கள், என்ன - என்று சொல்ல,
கிரி - அவ்விஜயார்த்த பர்வதத்தில், அட்ட -
தன்னால் ஜெயித்த
சம்பாதித்த |