நிஷ்கிரீடித முதலாகிய,
நோன்பொடு - மஹா நோன்புகளோடு,
செறிந்து - சேர்ந்தனுஷ்டித்து, செம்பொன் - சிவந்தபொன்னாலாகிய,
வங்கமே யனைய - வழுதுணைக்குச் சமானமாகிய, தோள்கள்
-
கைகள், வற்றி - வாடி, மாசடைய - திரையும்படியாக, நோற்றார்
-
நோன்பை நோற்றார்கள், எ-று. (59)
620. தவக்கொடி யிரண்டு போலத் தாங்கருங்கொள்கை தாங்கி
வத்தல்காய் வின்றிச் சித்தத் தொத்துநின் றொழுகு நாளுள்
நவைக்கெலா மிடமிப் போக மென்றுநற் கிரண வேகன்
சிவத்திறை யுறையுஞ் சித்தா யதனநற் கூடஞ் சேர்ந்தான்.
(இ-ள்.) (இவர்கள்
இவ்வாறு நோன்பு நோற்று), தவக்கொடி
யிரண்டுபோல் - இரண்டு தபக்கொடிகள்போல,
தாங்கரும் -
தாங்குதற்கரிதாகிய, கொள்கை - சாரித்திரத்தை, தாங்கி
- தரித்து,
உவத்தல் - ஒரு விஷயத்தில் ஸந்தோஷித்தலும், காய்வின்றி
ஒரு
விஷயத்தில் த்வேஷித்தலும் இல்லாமல், சித்தத்து - மனதில்,
ஒத்து
நின்று - ஸமத்வீபாவத்தோடு கூடி நின்று, ஒழுகு நாளுள் - நடக்கின்ற
காலத்தில், இப்போகம் - இந்த ஸம்சார போகமானது, நவைக்கெலாம்
- இன்பங்கட்கெல்லாம், இடம் என்று - இருப்பிடமென்று, (தர்மத்தை
யுணர்ந்து), நல் - நன்மையான, கிரணவேகன் -
கிரணவேக
மகாராஜன், சிவத்திறை - மோட்ச நாயகனாகிய ஜிநேஸ்வரப்பிரதிமை,
உறையும் - தங்குதல் கொண்டிராநின்ற,
சித்தாயதனம் -
ஸித்தாயதனமென்னும் பெயரையுடைய, நல் - நன்மையாகிய, கூடம்
- (விஜயார்த்த பர்வதத்தின் கீழ்த்திசையில் பிரதம
சிகரத்திலுள்ள)
அக்கிருத்திமசைத்யாலயத்தை, சேர்ந்தான் -
அடைந்தான்,
எ-று. (60)
621. ஐயைந்து காத மோங்கி யகன்றுநீண் டடியி னுச்சி
யையைந்திற் பாதி நீள மகலமாஞ் சிகரந் தன்னைப்
பையொன்றும் பரவை யல்குற் பட்டிகைச் சூட்டுப் போல
மையொன்றி மலர்ந்த கண்ணார் வனப்பிற்கா விரண்டு சூழ்ந்த.
(இ-ள்.)
ஐயைந்து காதம் -
(அந்த
அக்கிருத்திமஜிநசைத்யாலயமானது) இருபத்தைந்து காதம், ஓங்கி
-
உன்னதமாகி, அடியின் - கீழிடத்தில், அகன்று - முன் சொன்ன
இருபத்தைந்துகாத மகலமாகி நீண்டு - அதே நீளமாகி,
உச்சி -
மேலே, (நடுவிடம்) ஐயைந்திற்பாதி - பன்னிரண்டரைக்காதம், நீளம்
- நீளமும், அகலம் - அகலமும், ஆம் - ஆகின்ற, சிகரந்தன்னை -
(அந்த அக்கிருத்திமஜிநசைத்யாலயமுள்ள) சிகரத்தினை,
பை -
சர்ப்பத்தினது பணாமுடியை, ஒன்றும் - ஒத்திராநின்ற,
பரவை -
விசாலித்த, அல்குல் - அல்குலினையுடையவரும்,
மை -
அஞ்சனமானது, ஒன்றி - சேர்ந்து அழகு பொருந்தி,
மலர்ந்த -
அகன்ற, கண்ணார் - கண்களையுடையவருமாகிய
மாதரது,
பட்டிகைச்சூட்டுப்போல - மேகலாபரணம் |