போல, வனப்பின் - அழகு பொருந்திய,
காவிரண்டு - இரண்டு
உத்யானங்கள், சூழ்ந்த - சூழ்ந்துள்ளன, எ-று.
(62)
622. வேதிகைத் தோர ணங்கள் வேய்ந்தன காந்தி யார்ந்த
சேதிய மரங்க ணான்கு திசைதொறுஞ் செறிந்த காவு
ளாதியோ டந்த மில்லா வறிவரன் கோயி லெய்தும்
வீதிக டோறும் நான்கு கோபுரம் விளங்கு நின்றே.
(இ-ள்.) வேதிகை
- அந்த ஆலயத்திலுள்ள பீடத்தை,
தோரணங்கள் - தோரணங்களானவை, வேய்ந்தன - சூழ்ந்துள்ளன,
காந்தியார்ந்த - பிரகாசம் நிறைந்த, சேதியமரங்கள்
- சைத்ய
விருட்சங்கள், நான்குதிசை தொறும் - சதுர் மஹாதிக்குகடோறும்,
செறிந்த - சேர்ந்திராநின்றன, காவுள் - அந்தச்
சைத்யாலத்தைச்
சூழ்ந்திராநின்ற உத்யான வனத்தில்,
ஆதியோடந்தமில்லா -
ஆதியந்தர ஹிதமாகி அக்கிருத்திமமாகிய, அறிவரன்
கோயில் -
ஜினசைத்யாலயத்தை, எய்தும் - அடையும்படியான, நான்கு வீதிகள்
தோறும் - சதுர் மஹா வீதிகள்தோறும், நான்கு
கோபுரம் -
(வீதிக்கொரு கோபுரமாக) நான்கு கோபுரங்கள்,
நின்று -
நிலைபெற்று, விளங்கும் - பிரகாசிக்கும், எ-று.
நான்கு - இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.
(62)
623. கனகநன் மணியுங் கம்பங் குமுதமும் பாலி காலு
மனநிறை பூத மாடும் பாவைகள் கூட சாலை
வினைவெல்லும் வேத மூன்றும் புராணமும் மெழுதி வெய்யோன்
றனதிடம் போன்று வென்றோர் தலைவன திருக்கை யாமே.
(இ-ள்.)
கனக நன்மணியும் -
பொன்னும் நல்ல
இரத்தினங்களும், கம்பம் குமுதமும் பாலிகானும் - ஸ்தம்பங்களும்
குமுதவீத்துகளும் பாலிகால்களுமாகிய போதிகைகளுமாம் (அதாவது :
அவ்வாலயத்தில் ஸ்தம்பங்கள் பொன்னாலும்
போதிகைகள்
இரத்தினங்களாலும் செய்யப்பட்டனவாம்),
கூடசாலை -
கூடமென்னும் வெளிமண்டபம், மனம்நிறை - மனப்பூர்த்தியான,
பூதம் - பவித்திரமாகிய, ஆடும் -
ஆடுகின்ற, பாவைகள் -
சித்திரப்பாவைகளின் வடிவங்கள் விளங்குவதாம்
(அதாவது :
மேற்படி வடிவங்கள் எழுதப்பட்டதாம்), வினை - கர்மங்களை,
வெல்லும் - கெடுக்கும்படியான, வேதமூன்றும் - அங்கம் பூர்வம்
பாஹ்யமென்னும் ஆகமத்திரயங்களும், எழுதி -
எழுதப்பட்டு,
வெய்யோன்றனது - சூர்யனுடைய, இடம்போன்று - ஸ்தானமாகிய
விமானம்போல், வென்றோர் தலைவனது - ஸகல கர்மங்களையும்
ஜயித்தவராகிய இறைவரது, இருக்கையாம்
- ஸ்தானம்
விளக்குவதாகும், எ-று.
(63) |