கிரணவேகன் - கிரணவேக மகாராஜன், நல் - நன்மையாகிய,
கூடம் -
அச்சித்தாயதன கூடத்தில், மால் - ஸர்வஜ்ஞபிரதிமை,
உறை -
இராநின்ற, இடம் - ஆலயத்தை, குறுகும் எல்லையுள் - மேற்கூறியபடி
அடைந்ததும், நீடியாது - காலம் நீட்டிக்காது சீக்கிரமாக, இழிந்து -
இறங்கி, பின் - பின்பு, நிலத்தின்மேல் - பூமியின்மேல்,
வரா -
நடந்துவந்து, கோடு - சிகரங்களால், நீள்
- நீண்ட, கோபுரம் -
வாசற்கோபுரத்தை, கடந்து - தாண்டி, கும்பிடா
- உள்நுழைந்து
கையைக்குவித்துக் கும்பிட்டு, எ-று.
(66)
627. மலர்கையி னேந்திமா மேரு சூழ்வரு
மலர்கதி 1ரருக்கனிற்
கிரண வேகன்றான்
பலமுறை வலம்வரப் பரமன் கோயிலு
ணிலையுறு கதவங்க ணீங்கி நின்றவே.
(இ-ள்.) (மேற்கூறியபடி
கும்பிட்டபின்), மலர் - புஷ்பங்களை,
கையின் - கையிலே, ஏந்தி - தரித்து, மாமேரு
- மஹாமேரு
பர்வதத்தை, சூழ்வரும் - சூழ்ந்து பிரதட்சிணமாகச் சுற்றி வருகின்ற,
மலர் - விசாலித்த, கதிர் - கிரணங்களையுடைய,
அருக்கனில் -
சூர்யனைப்போல், கிரணவேகன்றான் - கிரணவேக
மகாராஜன்,
பலமுறை - பலவாகிய மூன்று முறை, வலம் வர - பிரதக்ஷிணமாக
வர, பரமன் - அருக பரமனுடைய, கோயிலுள் - ஆலயத்திற்குள்,
நிலையுறு - நிலை பெற்ற, கதவங்கள்
- கபாடங்கள், நீங்கி -
தாமே திறக்கப்பட்டு, நின்ற - நின்றன, எ-று.
(67)
628. கெடுகலங் கண்டவந் நாய்கன் கேளிர்போற்
குடைமும்மை நீழளங் கோனைக் காண்டலு
மடிமிசை யலர்சொரிந் தரற்றி யன்பினாற்
படிமிசைக் களிறுபோற் பணிந்தெ ழுந்தனன்.
(இ-ள்.) (அவ்வாறுகபாடங்கள்
திறக்கப்பட்டதும்), கெடுகலம்
- ஸமுத்திரத்தில் காணாமல் கெட்டுப்போன கப்பலை,
கண்ட -
மறுபடியும் பார்த்த, அந்நாய்கன் -
அக்கப்பற்றலைவனாகிய
செட்டியினது, கேளிர்போல் - சுற்றத்தாரைப் போல், குடைமும்மை
- சத்திரத்திரயத்தின், நீழல் - நிழலையுடைய, நங்கோனை
- நமது
தலைவனாகிய ஜினனது பிரதிமையை, காண்டலும்
- பார்த்த
மாத்திரத்தில், (அக்கிரணவேகன்) அடிமிசை - பாதங்களில்,
அலர்
- புஷ்பங்களை, சொரிந்து - தூவி,
அரற்றி - ஸ்துதித்து,
அன்பினால் - பக்தியினால், படிமிசை - பூமியின் மேல், களிறுபோல்
- யானையைப்போல், பணிந்து - படிந்து வணங்கி, எழுந்தனன்
-
எழுந்தான், எ-று.
(68)
____________________________________________
1அருக்கனிலென்பது
பருதியில் என்றும் சில பிரதிகளில்
காணப்படுகின்றது. |