மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 289


 

 629. மணிநிலஞ் சந்தனங் கொண்டு மட்டியா
     வணிபெற வருச்சனை விதியி னர்ச்சியா
     விணையிலா விறைவனைப் பணிந்தெ ழுந்துபின்
     றுணிபடு வினையவன் றுதிதொ டங்கினான்.

     (இ-ள்.)  (அங்ஙனம்  வணங்கி யெழுந்தபின்), மணி - அழகிய,
நிலம்   -   பூமியை,   சந்தனங்கொண்டு  -  சந்தனத்தைக்கொண்டு,
மட்டியா  -  மெழுகி,   (அதாவது :  பூசி),  அணிபெற - அழகுபெற,
அருச்சனை  -  அஷ்ட  விதார்ச்சனையை, விதியின் - கிரமத்தின்படி,
அர்ச்சியா  -  அர்ச்சித்து, இணையிலா - உவமையில்லாத, இறைவனை
- ஸர்வஜ்ஞனை, பணிந்து - வணங்கி, எழுந்து - எழுந்து நின்று, பின்
- பிறகு,      துணிபடு     -   கெடுக்கப்படும்,     வினையவன் -
கர்மங்களையுடையவனாகிய          அக்கிரணவேகன்,     துதி -
ஸ்தோத்திரத்தைதச்  செய்வதற்கு, தொடங்கினான்  - ஆரம்பித்தான்,
எ-று.                                                  (69)

வேறு.

 630. அறிவி னாலறி யாத வறிவனீ
     பொறியி னால்வரும் போகியு மல்லனீ
     மறுவி லாத குணத்துனை வாழ்த்துமா
     றறிகி லேனடி யேனற வேந்தனே.

     (இ-ள்.) (அவ்வாறு  துதிக்கத்தொடங்கிய  அவன், சர்வஜ்ஞனை
நோக்கி),    அறிவினால்   -    ஹேதுவாகிய  மதி  சுருதி  அவதி
மனப்பரியங்களிலும்   விஷயமாகிய   இந்த   நான்கு ஞானங்களால்,
அறியாத   -   கிரகித்தறியாத,  அறிவனீ  - (ஸர்வத்திரவிய பரியாய,
யுகபத்   ஸகலப்பிரத்தியக்ஷமாகிய)   கேவல ஞானத்தை யுடையவனீ,
பொறியினால்   -   பஞ்சேந்திரியங்களினால்,   வரும்  -  வருகின்ற,
போகியும்  -  போகத்தையுடையவனும், அல்லன்நீ - அல்லாதவனாகி
ஸ்வாத்மோத்த   அனந்த  சுகத்தையுடையவனும் நீ, அறவேந்தனே -
தர்மத்துக்கரசனாகிய   சுவாமியே!,   மறுவிலாத   -  களங்கமில்லாத,
குணத்து  -  குணத்தையுடைய,   உனை - உன்னை, வாழ்த்துமாறு -
ஸ்துதிக்கும்படியான   விதத்தை,   அடியேன் - அடியேனாகிய யான்,
அறிகிலேன் - தெரியாதவனாயிரா நின்றேன், எ-று.             (70)

 631. ஒன்றி யாவையு முண்மையி னாலெனா
     வொன்ற லாமையு முண்மையு மோதினா
     யொன்றி டாதன போலுநின் வாய்மொழி
     யொன்றி டாவினை யோடுழல் வாருளம்.

     (இ-ள்.)  யாவையும்   -   ஜீவாதி  திரவியங்கள்  யாவையும்,
உண்மையினால்   -   அதனதன்   தத்பாவமாகிய   தன்மையினால்
(அதாவது : திரவ்வியார்த்திக நிச்சய நயா