வைசயந்தன் முத்திச்சருக்கம் 29


 

    மத்தமால் களிறு செம்பொன் மலையினை வலம்வந் தாற்போற்
    றொத்தொளிர் மலர்க டூவிப் பலமுறை வலம்வந் திட்டான்.

     (இ-ள்)  பத்தொடு  -  பத்து  மாற்றொடுகூடி யுயர்ந்த, பைம் -
பசுமை பொருந்திய, பொன் - பொன்னினாலும், பதினாறாய - பதினாறு
குணங்கள்   பொருந்திய,   நல்  -  நன்மையாகிய,  மணியவற்றில் -
இரத்தினங்களாலும்,   சித்திரத்து  -  விசித்திரமாக,  இயற்றப்பட்ட -
இழைத்துச் செய்யப்பட்ட, திருநிலையத்தை - ஸ்ரீநிலையத்தை, எய்தி -
அடைந்து,  மத்த  -  மதம்பொருந்திய, மால் - பெரிய, களிறு - ஒரு
யானையானது,  செம்பொன்  மலையினை  -  மகம்மேரு பர்வதத்தை,
வலம்    வந்தாற்போல்   -   வலமாக   வந்ததுபோல்,   தொத்து -
கொத்துகளாகி,  ஒளிர்  -  பிரகாசிக்கின்ற,  மலர்கள் - புஷ்பங்களை,
தூவி - சொரிந்து,  பலமுறை  -  பலமுறைகள், வலம் வந்திட்டான் -
வலமாக வந்தான், எ-று.                                   (62)

 63. நிறைமதி கண்ட நீல மாக்கடல் போல நீடா
    திறைவன துருவங் காணா வெழுதரு விசோதி தன்னாற்
    சிறையழி புனலிற் செல்லுங் காதல னாகிச் சீர்சால்
    துறவினுக் கிறைவன் றன்மேற் றுதிவகை தொடங்கி னானே.

     (இ-ள்)  நிறைமதி - சம்பூர்ணச்  சந்திரனை,  கண்ட - பார்த்த,
நீலம் - நீல நிறமாகிற  (ஜலத்தையுடைய), மா - பெரிய, கடல்போல -
சமுத்திரம்போல,  நீடாது - சீக்கிரமாக,  இறைவனது - பகவானுடைய,
உருவம் - ரூபத்தை,  காணா - கண்டு, எழுதரு - அதனாலுண்டாகிய,
விசோதி  தன்னால் - சுத்தபரிணாம  மிகுதியால், சிறை - அணையை,
அழி - அழித்து,  செல்லும்  -  செல்கின்ற, புனலிற் ஜலத்தைப்போல,
காதலனாகி  -  அடங்காத  பக்தி   விருப்பையுடையவனாகி,   சீர் -
சிறப்புகளினால்,   சால் - மிகுதியாகிய,  துறவினுக்கு - துறவையுடைய
முனிகளுக்கெல்லாம்,     இறைவன்றன்மேல்     -     நாயகனாகிய
சுவாமியின்பேரில்,  துதிவகை  -  தோத்திரங்களை, தொடங்கினான் -
கூற ஆரம்பித்தான், எ-று.

     துறவு - ஆகுபெயராய் அதனையுடையாரை உணர்த்திற்று.   (63)

வேறு.

 64. பூமாலை முதலாய புனையாத திருமூர்த்தி
    காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறையுமே
    காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறைந்தாலுங்
    கோமானின் றிருவுருவங் கொண்டுவப்பா ரரியரே.

     (இ-ள்)  பூமாலை  முதலாய  -  பூமாலை  முதலானவைகளை,
புனையாத - அலங்காரமாக  வணியாத,  திருமூர்த்தி - அழகிய உமது
பரமௌதாரிக   திவ்ய   தேகமானது,  காமாதி  - ஆசை முதலாகிய
குற்றங்களை (அதாவது விபாவங்களை),