292மேருமந்தர புராணம்  


 

     யங்க பூவம தாமொழி துந்துபி
     யெங்க டீவினை தீர விளங்குமே.

     (இ-ள்.)  பொங்கு  -  பெரிதாகிய,  சாய்மரை  - சாமரைகளும்,
பூமழை   -   புஷ்பவருஷமும்,   மண்டிலம்   -  பிரபாமண்டலமும்,
சிங்கமேந்தணை   -   சிம்மத்தினால்   தாங்கப்பட்ட  சிம்மாசனமும்,
பிண்டி   -   அசோக  விருட்சமும், செழும் - செழுமை பொருந்திய,
குடை  -  முக்குடையும்,  அங்கபூவமதாம் - அங்காகமம் பூர்வாகமம்
ஆகிய,    மொழி   -   திவ்வியத்துவனியும்,    துந்துபி   -  தேவ
வாத்தியங்களும்,   (ஆகிய  இந்த  அஷ்ட  மஹாப்ராதிஹார்யங்கள்),
எங்கள் -  (தரிசிக்கின்ற)  எங்களுடைய,  தீவினை - பாப வினைகள்,
தீர - நீங்கும்படியாக,   விளங்கும் - நின்னிடத்தே   விளங்குகின்றன,
(என்று ஸ்தோத்திரம் பண்ணினான்), எ-று.                    (76)

வேறு.

 637. விலங்கர சனையவக் காளை வீரனை
     யிலங்கிநின் றடிபணிந் தேத்தி யிவ்வகை
     வலங்கொண்டு முனியரிச் சந்தி ரன்னவ
     னலங்கலஞ் சேவடி முடியிற் றீட்டினான்.

     (இ-ள்.)  விலங்கரசனைய  -  மிருகராஜனாகிய சிம்மம்போன்ற
பாராக்கிரமத்தை  யுடைய,  அக்காளை - அக்குமரனாகிய கிரணவேக
மகாராஜன்,   வீரனை  -  அனந்த   வீரியத்தையுடைய  ஸர்வஜ்ஞப்
பிரதிமையை,    இவ்வகை   -   இந்தப்பிரகாரம்,   இலங்கிநின்று -
குணங்களால்   விளங்கி   நின்று,  ஏத்தி  -  ஸ்தோத்திரம் பண்ணி,
வலங்கொண்டு  -  மறுபடியும்  ஆலயத்தைப்   பிரதக்ஷிணஞ்செய்து,
முனியரிச்சந்திரனவன்   -   (ஆலயப்  பிராகாரத்துள்    ளிராநின்ற)
அரிச்சந்திரனென்னும்     பெயருள்ள   முனிவரனுடைய,  சேவடி -
அழகிய   திருவடிகளை,   அலங்கல் - மாலைகளையணிந்த, அம் -
அழகிய,   முடியில்  -  கிரீடத்தையுடைய   சிரசில்,   தீட்டினான் -
சேர்த்தி வணங்கினான், எ-று.                              (77)

 638. அருந்தவ னரசனே குசல மோவெனத்
     திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்
     றிருந்தவ னெழுந்துமாற் றகத்தும் வீட்டினும்
     பொருந்துகா ரணமருள் போற்றி யென்றனன்.

     (இ-ள்.)  (அவ்வாறு  வணங்கிய  மாத்திரத்தில்)  அருந்தவன் -
அரிதாகிய    தபத்தையுடைய   அம்முனிவன்,   (அக்கிரணவேகனை
நோக்கி),   அரசனே   -   ராஜனே!,   சீயவென்று  - ஜீயாத் என்று
(அதாவது :   ஜெயிக்கக்    கடவாயென்று     ஆசீர்வாதஞ்செய்து),
குசலமோவென   -   க்ஷேமந்தானோ  வென்று  கேட்க, திருந்திய -
திருத்த