வம், பின்னமேவ, அபின்னமேவ,
சூன்யமேவ தத்துவமென்று)
பாவித்தால், மித்தம் - மித்தியாத்துவமாகும், எ-று. (80)
நித்தியவாதம்
வேறு.
641. நித்தமே தத்துவ மென்று நின்றவன்
சித்தம்வைத் தப்பொரு டெரிந்து செப்புமே
னித்தமே யென்றகோ ளழியு மன்றெனில்
தத்துவந் தான்பெறற் பாடு மில்லையே.
(இ-ள்.) நித்தமே
- ஸர்வதா நித்தியமே, தத்துவமென்று -
தத்துவமாகுமென்று, நின்றவன் - சொல்லி அதன்வழியில் நின்றவன்,
சித்தம்வைத்து - மனம்வைத்து, அப்பொருள் - ஸர்வதா நித்யமாகிய
வப்பொருளை, தெரிந்து - தெளிந்து, செப்புமேல் - சொல்லுமானால்,
நித்தமேயென்ற - ஸர்வதா நித்யமேயென்ற, கோள் - கொள்கையானது,
அழியும் - கெடும், (அதாவது : ஸ்யாதனித்ய
ஸ்வரூபமுமாகும்),
அன்றெனில் - அப்படி
ஒருவன் மனம்வைத்துச் சொல்ல
வேண்டுவதில்லை நித்தியமேவதத்துவ மென்றால், தத்துவந்தான்
-
அவ்விதம் ஸர்வதா நித்தியமாகிய தத்துவமான வதனை, பெறற்பாடு -
அதை ஒருவன் சொல்ல வேண்டியதும் அதனைக்கேட்டு அடைய
வேண்டியதும், இல்லை - கிடையாது, எ-று. (81)
642. நிலையின தன்மையே தோற்றங் கேடிவை
யிலையெனி லிறைவனு நூலு மில்லையால்
நிலையிலா மாற்றது நீக்க மின்மையிற்
றொலைவிலா வீட்டது தோற்ற மில்லையே.
(இ-ள்.) நிலையின தன்மையே
- (தத்துவம்) நித்தியஸ்வரூபமே,
தோற்றம் - உத்பாதமும், கேடு - வியமுமாகிய,
இவை - இந்த
உத்பாதவ்யயங்களாகிய அநித்தியகுணங்கள்,
இலையெனில் -
ஸர்வதா இல்லையென்றும் நித்தியமேவ
தத்துவமென்றும்
சொல்லுமிடத்தில், நிலையிலா - அநித்தியஸ்வரூபமாகிய, மாற்றுது -
ஸம்ஸாரத்தினது, நீக்கமின்மையில் -
நீக்கம் முடிவு
இல்லையாகையால், தொலைவிலா - நீக்கமில்லாத,
வீட்டது -
மோக்ஷத்தினது, தோற்றம் -
தோற்றமானது, இல்லை -
உண்டாவதில்லை, (ஆகையால்), இறைவனும்
- (இவையறிந்து
சொல்லும்) ஞானியாகிய ஆப்தனும், நூலும்
- அவனால்
தெரிவிக்கும்படியான பரமாகமும், இல்லை - இல்லாமற்போகும், எ-று.
ஸர்வதா நித்யமேவதத்துவமானால், ஆப்தேஷ்டம்
ஆகமேஷ்டம்
ஸம்சாரேஷ்டம் மோக்ஷேஷ்டங்கள் ஸம்பவியாவென்பது இதனால்
பெறப்படும். (82)
|