296மேருமந்தர புராணம்  


 

     மொன்பதி னோடுமா றெய்த வும்பொரு
     ணின்றதே யென்பவர் நிற்க நிற்கவே.

     (இ-ள்.)  தன்சொல் மாறாகி - ஸர்வதாநித்தியமே பேசுமிடத்தில்
அப்படிப்   பேசப்பட்டவனது   வசனமே விரோதமாகி, மேற்கோள் -
அதன்மேலெடுத்துச்       சொல்லும்    திருஷ்டாந்த     பூதமாகிய
மேற்கொள்கைகளும்,   அழிந்து - கெட்டு, அதன்பின் - அதன்பிறகு,
பிறன்கோள்பிடித்து  -  பிறனுடைய கொள்கையைப் பிடித்துண்டாகிய,
இட்டதிட்டமா    மொன்பதினோடும்   -   இஷ்டம் ஆறு திருஷ்டம்
மூன்றுமாகிய     இந்த      ஒன்பதினோடும்,       மாறெய்தவும் -
மாறுபாட்டையடையவும்,        பொருள்      -     பொருளானது,
நின்றதேயென்பவர்  -   ஸர்வதா நித்யமேவவென்று சொல்பவர், நிற்க
நிற்க - அவ்வழியிலே தெளியாமல் நிற்கக்கடவர், எ-று.         (85)

அநித்தியவாதம்

வேறு.

 646. அனித்தமே தத்துவ மென்னு மாத்தனும்
     நினைப்பும் வாசக மும்பொரு ளும்வினா
     வனைத்து மக்கணத் தொட்டறக் கெட்டபின்
     னெனைத்துமில் லென்பதெத் தைக்கொண் டெத்தையோ.

     (இ-ள்.)  அனித்தமே  -  ஸர்வதா அனித்தியமேவ, தத்துவம் -
தத்துவமாகும், என்னும் - என்று சொல்லும், ஆத்தனும் - முக்கியத்தை
யுடையவனும்,    நினைப்பும்   -   அத்தத்துவத்தை   நினைக்கின்ற
ஆலோசனையாகிற    தியானமும்,    வாசகமும் - அப்படி  ஸர்வதா
அனித்தியமாகிய  அத்தத்துவத்தை மொழிதலும், பொருளும் - அப்படி
ஸர்வதா   அனித்தியமாகிய  வஸ்துவும்,   வினா - அதை யொருவன்
கேட்கின்றதுமாகிய,  அனைத்தும் - இந்நான்கும், அக்கணத்து - அந்த
சமயத்திலேயே   (அதாவது :   தத்க்ஷணத்தில்),   ஒட்டற  -  பற்றற,
(அதாவது :   முழுதிலும்),  கெட்டபின்   -   அத்தத்துவப் பிரகாரம்
நாசமானபின்,  எனைத்தும் -  யாதொன்றும், இல்லென்பது - ஸர்வதா
இல்லையென்பது,   எத்தைக்கொண்டு  -  எந்தவசனத்தைக் கொண்டு,
எத்தை - எந்தப்பொருளை, எ-று.

     ஸர்வதா   அனித்தியம்  சாதித்தால்  ஒன்றுமில்லை யாகையால்
அப்படிச்    சாதிப்பதே    பிரத்தியக்ஷ   விரோதமென்பது   இதன்
தாத்பரியம்.                                            (86)

 647. கணங்க ணந்தொறும் தோற்றமும் கேடுமாய்த்
     தணந்த தேதத்து வம்நிலை யில்லெனிற்
     கணங்க ணந்தொறுங் கெட்டவன் கேட்டினை
     யுணர்ந்து சொல்லுமோ வில்லையோ வுண்டெனில்.