மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 309


 

 669. மதுரமென் றுரைத்த சொல்லான் மதுரந்தான் வசிக்கப் பட்டு
     மதுரத்தின் விகற்ப மெல்லாம் வைத்தறி வறிந்த வண்ணம்
     மதுரச்சொற் சொல்ல மாட்டா தாதலா லவாச்சி யம்மாம்
     மதுரந்தான் மதுரச் சொல்லாற் சொலப்படும் சொலப்ப டாதாம்.

     (இ-ள்.)   மதுரமென்று    -    மாதுரியமென்று,   உரைத்த -
சொல்லப்பட்ட,    சொல்லால்    -     வசனத்தால்,  மதுரந்தான் -
மாதுரியந்தான்,    வசிக்கப்பட்டு   -  வசிகரமாகிக்  கிரகிக்கப்பட்டு,
மதுரத்தின்      -    அத்தித்திப்பினுடைய,      விகற்பமெல்லாம் -
வித்தியாசமெல்லாம், வைத்து  -  ரஸநேந்திரியத்தில் வைத்து, அறிந்த
வண்ணம் - மனதறிந்த  விதாயமாக, மதுரச்சொல் - மதுரமென்றசொல்,
(அந்தத்  தித்திப்பினுடைய பேதவசனத்தால்), சொல்லமாட்டாதாதலால்
- சொல்ல  முடியாதாகையால்,  அவாச்சியம்மாம் - அவாச்சியமாகும்,
மதுரந்தான்    -   அந்த    மாதுரியந்தான்,    மதுரச்சொல்லால் -
மாதுரியமென்கிற   சொல்லினால், சொலப்படும் - வசனிக்கவும் படும்,
சொலப்படாதாம்  - தித்திப்பின் பேதப்படி சொல்ல முடியாததுமாகும்,
எ-று.                                                 (109)

 670. வையத்து வார்த்தைக் கெல்லாம் வாச்சிய மில்லை யாகில்
     பொய்யைத்தா முரைக்கின் றார்க ளாவரிப் பூத லத்தார்
     மெய்யைத்தா னூலுஞ் சொல்லா துணர்வும்வே றாதல் வேண்டும்
     வையத்து வழக்கு நூலோ டிவனுமா றாயி னானே.

     (இ-ள்.)    வையத்து   -    இந்த   வுலகத்தில்   உண்டான,
வார்த்தைக்கெல்லாம்     -    வசனங்களுக்கெல்லாம்,  வாச்சியம் -
வசனத்தால் குறிக்கப்பட்ட பொருள், இல்லையாகில் - இல்லாவிட்டால்,
இப்பூதலத்தார்    -    இப்பூமியிலுள்ளவர்கள்,   பொய்யைத்தாம் -
அசத்தியத்தைத்தாம்,                  உரைக்கின்றார்களாவர்   -
சொல்லப்பட்டவர்களாவார்கள்,   மெய்யைத்தான்   -  ஸத்தியத்தை,
நூலும் - பரமாகமும்,   சொல்லாது - சொல்லமாட்டாது, உணர்வும் -
அறிவும்,   வேறாதல்   வேண்டும்    -    வேறாகிய   தன்மையை
யடையவேண்டும்,    வையத்து   -    இவ்வுலகத்தில்,    வழக்கு -
வழங்குகின்ற     தன்மையுடனும்,     நூலோடு     -      ஆகம
சாஸ்திரத்தினுடனும்,     இவனும்    -    இந்த அவாச்சியவாதியும்,
மாறாயினான்   -   மாறுபாடாகவானான், (அதாவது : லோக வழக்கு,
ஆகமம் இவைகளுக்கு விரோதமாயினான்), எ-று.

     வாசகத்தால்   குறிக்கப்படும்  பொருளாகிய வாச்சியமின்றாகில்,
வாசகம்  பொய்யோ  மேய்யோவென்று  நிச்சயிக்கப்படாது;   பொய்
மெய்  என்பதற்கு   வேறுபாடின்றாகும்;  ஆகையால்  அவ்விரண்டும்
இல்லாதுபோம்.                                          (110)

பின்னவரதம்

 671. குணகுணி வேறே யென்னிற் கூடிய முடிவிற் றாகு
     முணர்வொடு காட்சி யாதி யுயிரின்வே றுளவு மாகுங்