வைசயந்தன் முத்திச்சருக்கம் 31


 

படிக்  குற்றமின்றி   விசாலித்த,   நாற்குணத்  தலைமை  -  அனந்த
சதுஷ்டய  குண  முதன்மையை,  விரித்தாலும்   -   தெரிவித்தாலும்,
கமலமீது  -  செந்தாமரைப்  பூவின் மேலே, உலவும் - 1ஸ்ரீ விஹாரம்
செய்யும்,  உனை  -  உன்னை,  காதலிப்பார்   -   விரும்பி  பக்தி
பண்ணக்கூடியவர்கள், அரியர் - அருமையா யிரா நின்றார்கள்,  எ-று.

     இதனால் குணஸ்தவம் சொல்லப்பட்டது.                 (66)

தத்துவங் கேட்டல்.

வேறு.

 67. என்றுறின் நிறைவனை யேத்தி மாதவத்
    தொன்றிய மனத்தனா யுலக நாதனை
    நின்றதத் துவத்தது நீர்மை யென்னெனக்
    குன்றனாற் கருளினான் குற்ற மற்றகோன்.

     (இ-ள்) என்று - என்று  கூறி,  நின்று - அபிமுகத்தில்  நின்று,
இறைவனை - ஸ்வாமியை, ஏத்தி - ஸ்தோத்திரம்பண்ணி, மாதவத்து -
உத்க்ருஷ்டமாகிய தபசிலே,  ஒன்றிய - பொருந்திய,   மனத்தனாய் -
மனதை  யுடையவனாகி,  உலக  நாதனை - மூன்று   லோகத்திற்கும்
நாதனாகிய  அந்த  ஸ்வாமியை,  நின்ற - உலகத்தில்  நிலைபெற்றிரா
நின்ற, தத்துவத்தது - ஜீவாதி பதார்த்தங்களினது, நீர்மை - குணங்கள்,
என்னென  -  எப்படிப்பட்டவை  யென்று  கேட்க,   குன்றனாற்கு -
பர்வதம்போல்  சலியாத  குணத்தையுடைய வைசயந்த  மகாராஜனுக்கு,
குற்றமற்ற கோன்  -  ராகத்வேஷ  மோகங்களில்லாத ஸ்வயம்பு நாம
தீர்த்தங்கரர், அருளினான் - அவற்றின் விவரங்களைக் கூறியருளினார்,
எ-று.                                                  (67)

வேறு.

 68. உயிரும்முயி ரல்லதும் புண்ணியம் பாவமூற்றுஞ்
    செயிர்தீர் செறிப்பு முதிர்ப்புங் கட்டும் வீடுமுற்ற
    துயர்தீர்க்குந் தூய நெறியுஞ்சுருக் காயு ரைப்பன்
    மயறீர்ந்த காட்சி யுடையோயிது கேண் மதித்தே.

     (இ-ள்) மயல் - மயக்கத்தினின்றும், தீர்ந்த - நீங்கிய (அதாவது :
தெளிந்த),  காட்சி  -  சம்மியந்தர்சனத்தை,  உடையோய்  - உடைய
வைசயந்த  மகாராஜனே,  உயிரும் - ஜீவபதார்த்தமும், உயிரல்லதும் -
அஜீவபதார்த்தமும், புண்ணியம்  -  புண்ணிய பதார்த்தமும், பாவம் -
பாவ பதார்த்தமும், ஊற்றும்-

_________________________________________________

1ஸ்ரீ : விஹாரம் செய்தல் - செல்லுதல்.