ஆஸ்ரவ பதார்த்தமும், செயிர்தீர் - குற்றம் நீங்கிய, செறிப்பும் -
சம்வர பதார்த்தமும், உதிர்ப்பும் - நிர்ஜரை பதார்த்தமும், கட்டும் -
பந்த பதார்த்தமும், வீடும் - மோக்ஷபதார்த்தமும், உற்ற - சம்சார
ஜீவன்களிடம் பொருந்திய, துயர் - துக்கங்களை, தீர்க்கும் - கெடுத்து
மோக்ஷமடைவிக்கும், தூய - பரிசுத்தமாகிய, நெறியும் - இரத்தினத்
திரயமாகிற மார்க்கத்தையும், சுருக்காய் - லகுவாக (அல்லது
சுருக்கமாக), உரைப்பன் - சொல்லுவேன், இது - (இந்த ஜீவாதி
நவ பதார்த்தங்களைப்பற்றிக் கூறும்) இதனை, மதித்து - உயர்வாக
எண்ணி, கேள் - கேட்பாயாக, எ-று. (68)
வேறு.
69. அறிவு காட்சிய தாயைந்து மூன்றுமம்
பொறியோ டுட்கர ணத்துயிர்ப் பாயுவிந்
நெறியின் வாழும் பொருளது சீவனா
மறியின் வீட்டது மாற்றது மாகுமே.
(இ-ள்) அறிவு - ஞானமும், காட்சியது - தர்சனமும், ஆய் -
ஸ்வபாவமாகி, ஐந்து பொறியோடு - பஞ்ச இந்திரியங்களோடும்,
மூன்று - மூன்றாகிய, உட்கரணத்து - அந்தக் கரணங்களோடும்,
உயிர்ப்பு - உச்சுவாஸ நிச்சு வாஸமும், ஆயு - ஆயுஷ்யமும் (ஆகிய),
அம் - அழய, இந்நெறியின் - இந்த தசப் பிராணன்களில் (வரிசைக்
கிரமத்தால்), வாழும் - வாழ்ந்த வாழ்கின்ற வாழும்படியான, பொருளது
- பொருளானது, சீவனாம் - ஜீவனாகும், அறியின் - அந்த
ஜீவன்களையறியுமிடத்தில், வீட்டது - மோட்ச ஜீவன்களென்றும்,
மாற்றதும் - ஸம்ஸார ஜீவன்களென்றும், ஆகும் - இருவகையாகும்,
எ-று.
ஸ்வபாவ ஞாநதர்சனம் பெற்ற ஜீவன்கள் மோட்ச ஜீவன்கள்;
விபாவ ஞானதர்சனத்தால் பௌத்கலிகமான தசப்பிராணாதார
ஜீவன்கள்
ஸம்ஸார ஜீவன்கள்; இவைகளின் விவரங்கள் மேல்
2-பாடல்களில்
சொல்லப்படும்.
தசப்பிராண வரிசைகள் :- ஏகேந்திரிய ஜீவனுக்கு - ஸ்பரிசன
இந்திரியம், காயவந்தக்கரணம் - உச்வாஸம், ஆயுஷியம் என்னும்
நாலு பிராணன்கள்; த்வீந்திரிய ஜீவனுக்கு - இவற்றோடு
ரஸனேந்திரியம், வாக்வந்தக் கரணம் சேர்ந்து, ஆறு பிராணன்கள்;
திரி இந்திரிய ஜீவனுக்கு க்ராண இந்திரியம் சேர்ந்து ஏழுபிராணன்கள்;
சதுர் இந்திரிய ஜீவனுக்கு - சக்ஷுசேர்ந்து எட்டுப்பிராணன்கள்;
அஸஜ்ஞி பஞ்சேந்திரிய ஜீவனுக்கு - காதுசேர்ந்து ஒன்பது
பிராணன்கள்; ஸஜ்ஞிபஞ்சேந்திரிய ஜீவனுக்கு - மனோவந்தக்கரணம்
சேர்ந்து பத்துப் பிராணன்களாகும். இவையெல்லாம் பதார்த்தஸாரத்தில்
தசப்பிராணாதிகாரத்திலும், இந்திரியமார்க்கணாதி காரத்திலும்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. (69) |