344மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)    இந்திரன்  -  தேவேந்திரனுடைய, தேவிமார்க்கும் -
பெண்சாதி    மார்களுக்கும், இறைமைசெய் - தலைமைத்தன்மையாகிய
அதிகாரத்தைத் தாங்கள்செய்யும்,  முறைமை - கிரமமானது, இல்லை -
இன்று, பைம் - பசுமை பொருந்திய, தொடி - வளையல்களை யணிந்த,
மகளிராவார்  -  மனித  ஸ்த்ரீமார்கள், பாவத்தால் - பாபவினையால்,
பெரியநீரார்  -  பெரிதாகிய    குணமுடையவர்களாய்,   மைந்தரை -
புதல்வரை,    பெறாமை   -  பெறாமல் மலடியாவதாலும், (அல்லது),
பெற்றால்  -  புதல்வர்ப்பெற்றால்,    இழந்திடல் - அப்பிள்ளைகளை
இழந்து    விடுவதினாலும், (அவையல்லாமலும்), மாற்றுப்பெண்ணில் -
தன்    புருஷனுக்கு   மற்றொரு ஸ்த்ரீ ஏற்படுவதனாலும் (அதாவது :
ஸபத்னி   அல்லது   சக்களத்தி  ஏற்படுவதாலும்), அந்தரத்தனைய -
ஆகாயத்திற்குச்  சமானமாகிய (அதாவது : அளவில்லாத), துன்பத்து -
துக்கத்தினால்,     ஆங்கதி   -    தங்களுக்காகிய அக்கதியையும்,
‘நீங்குவார்கள்   -    நீங்கி    வேறொரு கதியையும் அடைவார்கள்,
எ-று.                                                 (178)

 739. விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து
     அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து
     கருதிநற் கணவற் பேணுங் கற்புடை மகளி ரிந்த
     வுருவத்தி னீங்கிக் கற்பத் துத்தம தேவ ராவார்.

     (இ-ள்.)    விரதம் - பஞ்சாணு விரதங்களையும், சீலத்தராகி -
சீலாச் சாரத்தையுமுடையவர்களாகி, மெய்த்தவர்க்கு - உண்மையாகிய
தபத்தையுடைய   முனிவர்   முதலாகிய  பாத்திரர்களுக்கு, தானம் -
ஆஹராதிதானங்களை,   செய்து   -    கொடுத்து,    அருகனை -
அருகத்பரமேஸ்வரனது,   சரணம்   - பாதங்களில், மூழ்கி - படிந்து
(அதாவது : வணங்கி),    ஆன்றவர் - மேலான நிலைமையையுடைய
பஞ்சபரமேஷ்டிகளின்,   சிறப்புச்செய்து   -    பூஜையைச் செய்து,
நற்கணவன் - நன்மையான குணமுடைய தங்கள் புருடனை, கருதி -
மேலாக   நினைத்து,    பேணும்   - ரக்ஷிக்கின்ற, கற்புடை மகளிர்
பதிவிரதாகுணமுள்ள   ஸ்த்ரீகள்,   இந்த வுருவத்தின் - இந்த ஸத்ரீ
ரூபத்தினின்றும்,   நீங்கி   -   விலகி, (மறு சன்மத்தில்), கற்பத்து -
ஸௌதர்மாதி   கல்பங்களில்,    உத்தமம் - மேலான, தேவராவர் -
கல்பவாஸிதேவர்களாகப் பிறப்பார்கள், எ-று.

     அருகனைச்    சரணமூழ்கி    யென்பது அருகன சரணமூழ்கி
என்றும், கருதி நற்கணவற்பேணும் என்பது, கருதுநற் கணவற்பேணும்
என்றும்   பாடபேதமுண்டு.    அவற்றைக் கொள்வார், அவற்றிற்குத்
தக்கவாறு உரை செய்து கொள்க.  மேலான தேவராவர் என்றதனால்,
மஹர்த்திக    தேவர்களாகவே    பிறப்பரென்பது   கொள்ளப்படும்.
அருகனை - உருபுமயக்கம்.                              (179)

 740. மாதவந் தாங்கி வையத் தையராய் வந்து தோன்றி
     யேதமொன் றின்றி வீடு மெய்துவர் தைய லார்க