நெருக்கியவ் வரவங்
கொள்ள நின்றதம் மெய்ம்மை தம்மே
லொருக்கிய மனத்த ராகி யுடம்புவிட் டொருங்கு சென்றார்.
(இ-ள்.) அருக்கனை
- சூரியனை, சனியோடு - சனியென்னும்
கிரகத்தோடும், செவ்வாயோடு - அங்காரகனோடும், அரவுதான்
-
இராகுவென்னும் பாம்பானது, விழுங்கிற்றேபோல் - விழுங்கினதுபோல்,
அருக்கவேகன்றன்னோடு - கிரணவேக
முனிவனோடு,
ஆரியாங்கனைகடம்மை - (ஸ்ரீதரை, யசோதரை யென்னும் இரண்டு)
ஆரியாங்கனைகளையும், நெருக்கி - சேர்த்து, அவ்வரவம் - அந்த
மலைப்பாம்பானது, கொள்ள - அவ்வாறு உட்கொண்டு விழுங்க,
(அம்மூவரும்), நின்ற - நிலைபெற்ற, தம் - தங்களுடைய, மெய்ம்மை
தம்மேல் - யாதாத்மிய
குணத்தின்மேல், ஒருக்கிய -
ராகத்வேஷாதிகளை விட்டு ஒருமைப்பட்ட,
மனத்தராகி -
மனதையுடையவர்களாகி, உடம்புவிட்டு - சரீரத்தை விட்டு, ஒருங்கு -
ஒருதன்மையாக, சென்றார் - வேறு கதியில் சென்றார்கள், எ-று.
ஓடு - இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.
(184)
745. பாவிட்டன் மேலோர் கோபம் பணித்திலா மனத்தி னார்போய்க்
காவிட்ட கற்பத் தீரேழ் கடல்பெற்றங் குரிசைக்
கைமாப்
பேர்பெற்ற விமானத் தின்கண் முனியற்கப் பிரப
னானான்
றீபத்தைப் புரையு மாதர் தேவர்க்குத் திலத மானார்.
(இ-ள்.) (அவ்வாறு
சென்ற பின்), பாவிட்டன்மேல் - (இப்போது
மலைப்பாம்பாகித் தங்களை விழுங்கிய) பாபிஷ்டனாகிய
சத்திய
கோடன்மேல், ஓர் கோபம் - யாதொரு கோபத்தையும், பணித்திலா -
செய்யாத, மனத்தினார் - மனத்தையுடைய இம்மூவர்களும், போய் -
அவ்வாறு சரீரம் நீங்கிப்போய், காவிட்டகற்பத்து
- காபிஷ்ட
கல்பத்தில், ஈரேழ்கடல் - பதினாலு
கடற்காலம், பெற்று -
ஆயுஷ்யமாகப்பெற்று, அங்கு - அக்கல்பத்தில், உரிசைக்கைமா
-
ருசகப் பிரபையென்ற, பேர்பெற்ற
- பெயரையடைந்த,
விமானத்தின்கண் - தேவவிமானத்தில்,
(அவர்களுள்), முனி -
கிரணவேக முனிவரன், அற்கப்பிரபனானான் - ரவிப்பிரபனென்னும்
மஹர்த்திக தேவனாகப் பிறந்தான், தீபத்தைப்புரையும்
- பிரகாசம்
பொருந்திய குணத்தினால் தீபத்தை நிகர்க்கும், மாதர் - ஸ்த்ரீகளாகிய
இரண்டாரியாங்கனைகளும், தேவர்க்கு - அக்கல்பத்திலுள்ள
மற்ற
தேவர்களுக்கெல்லாம், திலதமானார் -
திலகம்போற் சிறந்த
தேவர்களானார்கள், (அதாவது : சற்குணமுள்ள
ஸாமானீக
தேவர்களாகப் பிறந்தார்கள்), எ-று. (185)
746. மறுவிலாக் குணத்தி னார்போய் வானவ ராக மாயாக்
கறுவினாற் பாந்தள் போகி நரகநான் காவ தெய்தி
|