356மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

  மன்னருக்க வேகன்மலி காவிட்டத்தின் வழுவி
  யன்னவர்க டம்புதல்வ னாகியவ தரித்தான்.

   (இ-ள்.)  மின்னினொடு   -   மின்னற்கொடியோடு,   மேகம் -
மேகமானது,  விளையாடுவதுபோல  - சேர்ந்து விளையாடுவதுபோல,
அன்னநடையோடு  -  ஹம்ஸ  பக்ஷிபோன்ற  நடையையுடைய  வச்
சித்ரமாலையோடு,  அவன் - அச்சக்கராயுதன், அமர்ந்து - பொருந்தி,
ஒழுகும்  வழிநாள்  -  செல்கின்ற நாட்களில், மன்னருக்க வேகன் -
பூர்வத்தில்    பொருந்திய    கிரணவேகனாகிய   அரசன்,   மலி -
நிறைவுபெற்ற, காவிட்டத்தின்  - காபிஷ்ட கற்பகத்தினின்றும், வழுவி
-  ஆயுரவஸாநத்தில்    நழுவி,    அன்னவர்கள்  தம்  -  அந்தச்
சக்கராயுதன்   சித்ரமாலையாகிய   தம்பதிகளுடைய,  புதல்வனாகி -
புத்திரனாகி, அவதரித்தான் - பிறந்தான், எ-று. (13)

வேறு.

 762. வானத்து மின்னு முன்னாண் மதியினைப் பயந்த தேபோற்
     றேனொத்த மொழியி னாளத் தேவனைப் பெற்ற போழ்தி
     னூனத்தை வையத் தின்க ணகற்றிநின் றுதவி மன்னன்
     மானத்தை யுடைய நாமம் வச்சிரா யுதனென் றிட்டார்.

    (இ-ள்.)   வானத்து   -   ஆகாயத்திலுண்டாகிய,   மின்னு  -
மின்னற்கொடியானது,   முன்னாள்   -  பூர்வபட்சத்து,  மதியினை -
சந்திரனை,   பயந்ததேபோல்   -   பெற்றதுபோல,   தேனொத்த -
தேனினை   நிகர்த்த   இனிமை   பொருந்திய,  மொழியினாள்  -
வசனத்தையுடைய       சித்ரமாலையானவள்,    அத்தேவனை   -
அந்தக்காபிஷ்ட     கல்பத்துத்    தேவனை,    பெற்றபோழ்தில் -
குமாரனாகப்    பெற்ற    காலத்தில்,    மன்னன்   -   சக்கராயுத
மகாராஜனானவன்,   வையத்தின்கண்  -  இந்தப்  பூமியிலுண்டாகிய,
ஊனத்தை - யாசக  ஜனங்களுக்குண்டாகிய வறுமையாகிற குற்றத்தை,
அகற்றிநின்று  -   நீக்கிநின்று,   உதவி   -    தானமாக  விசேஷ
பொருள்களை   யளிக்க,  (   அப்பிள்ளைக்குச்    சுற்றத்தார்கள் ),
மானத்தையுடைய - பெருமையை யுடைத்தாகிய, நாமம் - பெயரானது,
வச்சிராயுதனென்று    -   வஜ்ராயுத    குமாரனென்று,   இட்டார் -
சூட்டினார்கள், எ-று. (14)

 763. மதிகலை வளரத் தானும் வளர்வதே போல மைந்தன்
     விதியினாற் கலையும் வேந்தர் விஞ்சையும் விளங்க வோங்கி
     நுதிகொண்ட வேற்க ணல்லார் நோக்கினுக் கிலக்க மானா
     னதிபதி யதனை யாராய்ந் தரிவையர்ப் புணர்க்க லுற்றான்.

   (இ-ள்.)   (அதன்மேல்),    மதி   -  சந்திரனுடைய,  கலை  -
ஷோடசகலைகள்,   வளர   -   பூர்வபட்சத்தில்  வளர,  தானும் -
அச்சந்திரன்றானும், வளர்வதேபோல் - விருத்தி