36மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)    நற்காட்சி   -   ஸம்மியக்தரிசனத்தை,    உடை -
உடைத்தாகிய,     விலங்கு     -     விலங்குகளும்,  மானிடரும் -
மனுஷ்யர்களும்,  வதம் - பஞ்சாணு விரதத்தை,  செறிந்தும் - சேர்ந்து
(அனுஷ்டித்தாலும்   அனுஷ்டிக்காவிட்டாலும்),   கற்பாதி  முதலாக -
கல்பத்துக்கு  முதலாகிய  ஸௌதர்ம  கல்பம்  முதலாக, கற்பாந்தம் -
அச்சுதகல்பம் வரையில்,  உற - பொருந்த, செல்வர் - அடைவார்கள்,
நற்பால - நன்மையின்  பகுதியாகிய,  வதம் - பஞ்சாணு விரதங்களை,
செறிந்த  -  சேர்ந்திராநின்ற,   நரர்  -  மனுஷ்யர்கள்,  பவணாதி -
பவணலோகம்  முதல்,  கற்பாந்தம்  -  அச்சுத  கல்பம்  வரையிலும்,
விலங்கு   -  விலங்குகள்,   (பவணலோகம்   முதல்)  சாசராந்தம் -
ஸஹஸ்ரார  கல்பம்   வரையிலும்,  முறையுளி  -  வரிசைக்கிரமமாக,
காண்பர் - அடைவார்கள், எ-று.                            (76)

 77. போகநில விலங்குநரர் பொருந்தியநற் காட்சியரேல்
    நாகமுத லாஞ்சோத மீசான நண்ணிடுவர்
    மோகமிச்சார் பவணர்வி யந்தரர்சோ திடராவா
    ராகுபவ ரணுதிசாணுத் தரத்தைய மறத்தெளிந்தார்.

     (இ-ள்.) போகநிலம்  -  போக  பூமியிலிராநின்ற,  விலங்கும் -
விலங்குகளும்,  நரர் - மனுஷ்யர்களும், பொருந்திய நற்காட்சியரேல் -
ஸம்மியக்      தர்சனத்தை      யுடையவர்களானால்,      நாகம் -
தேவலோகத்துக்கு, முதலாம் - முதலாகிய, சோதமீசானம் - ஸௌதர்ம
ஈசான  கல்பத்தை,  நண்ணிடுவர்  -  அடைவார்கள்; மோகமிச்சார் -
மோகநியபரிணாமமுள்ள       மித்தியாதிருஷ்டிகள்,      பவணர் -
பவணர்களாகவும்,   வியந்தரர்   -   வியந்தரர்களாகவும், சோதிடர் -
ஜோதிஷ்கர்களாகவும், ஆவார் - பிறப்பார்கள்,  ஐயமறத்தெளிந்தார் -
சந்தேகமின்றித்   தெளிந்த   க்ஷாயிக   சம்மியக்  தர்சனத்தையுடைய
மஹாமுனிகள்,   அணுதிசை  -  நவாணுதிசையிலும்,  அணுத்தரத்து -
பஞ்சாணுத்தரத்திலும், ஆகுபவர் - அடைபவராவார்கள், எ-று.    (77)

 78. மீனாணும் பெண்ணு நாற்காலுங் காலிலவும்
    வான்மேல் வருவ தவழ்வ குறியிலவு
    மேன்மேல வேழ்நரகின் கீழ்ச்செல்லா மேற்செல்லு
    மேனான்கு வீடுதவம் விரதம்விலங் காமுறையே.

     (இ-ள்.)    மீன்    -   ஸ்வயம்புரமண  சமுத்திரத்திலிராநின்ற
மகாமஸ்யங்களும்,    ஆணும்    -   ஆடவர்களும்,  பெண்ணும் -
ஸ்திரீகளும்,  நாற்காலும்    -    சதுஷ்பாத   ஜீவன்களும்,   கால்
இலவும் - கால்   இல்லாதனவாகிய     சர்ப்பம்      முதலியனவும்,
வான்மேல் - ஆகாயத்தின்மேல், வருவ - பறந்து வருவனவாகிய பட்சி முதலியனவும்,    தவழ்வ  -   தவழ்ந்து   செல்வனவாகிய   ஆமை
முதலியவைகளும்,    குறியிலவும்    -    மனமில்லாத   அதாவது :
அஸஜ்ஞிபஞ்சேந்திரியமாகிய ஓணான் முதலியவைகளும், ஏழ்நரகின் -
ஏழுநரகங்களில், மேன்மேல - ஒன்றுக்கொன்று மேலே