சக்கராயுதன் முத்திச் சருக்கம் 361


Meru Mandirapuranam
 

   (இ-ள்.) (அதன்   மேல்)   கடி   -    வாசனை   பொருந்திய,
மலர்க்கொடியனாளை    -     புஷ்பக்கொடிக்குச்     சமானமாகிய
அவ்விரத்தினமாலை யென்னு   மாசகுமாரத்தியை,  காவலகுமரன் -
இராஜ குமாரனாகிய  வஜ்ராயுதன்,  எய்தி - விவாஹ விதி பூர்வமாக
வடைந்து,   வடிவுடை  -  ரூபத்தையுடைய,  தடக்கை  -  துதிக்கை
பொருந்திய,   வேழம்   -   ஆண்யானையானது,   பிடியொடு   -
பெண்யானையுடன்,    மகிழ்வதேபோல்   -   மனமொத்துக்   கூடி
ஸந்தோஷிப்பதுபோல, மலர்க்கொடிப்பந்தர் -புஷ்பக்கொடிகளாலாகிய
லதாமண்டபங்களிலும்,  குன்றம் -  செய்குன்றங்களிலும்,  வாலியும் -
தடாகங்களிலும்,  காவும் -  பூங்காவுகளிலும்,  எய்தி -  (அவளுடன்)
அடைந்து,  படி  மிசை - பூமியில்,  பட்ட -  உண்டாகிய, இன்பம் -
போக சௌக்கியத்தை, பரிவின்றி - வருத்தமில்லாமல், நுகருநாளில் -
அனுபவித்திருக்கின்ற நாட்களில், எ-று. (24)

 773. இன்பநீர்க் கடலை யேறி யிசோதரை யான தேவ
     னன்பினாற் சிறுவ னானா னரதன மாலைக் கன்று
     நந்திய மதியைக் கண்ட நளிகடல் போன்று ஞால
     மந்தமி லுவகை யெய்த வரதனா யுதனென் றாரே.

   (இ-ள்.)    இசோதரையான   -  யசோதரையான,   தேவன்  -
தேவனானவன்,   (அதாவது  :  முன்  யசோதரையாயிருந்து  அந்த
ஜன்மம்நீங்கிப்   பின்னர்   தேவஜனன   மெடுத்த  காபிஷ்டகல்பத்
தேவனானவன்),  இன்பம்  -   தேவ  (இன்பத்தின்,  நீர்  -  குணம்
பொருந்திய, கடலை - தனது ஆயுஷ்யஸ்திதியாகிய கடற்காலங்களை,
ஏறி - கடந்து,   (ஆயுரவஸானத்தில்),   அரதனமாலைக்கு  -  இந்த
இரத்தினமாலை    யென்னும்    பெண்ணுக்கு,    அன்பினால்    -
பூர்வவாஞ்சையினால்,  சிறுவனானான் - புத்திரனாகத் தோன்றினான்,
அன்று -  அப்பொழுது,  ஞாலம் -  இப்பூமியிலுள்ளோர்,  நந்திய -
நிறைந்த,  மதியை  -  பூர்ணச்சந்திரனை,  கண்ட  - பார்த்த, நளி -
குளிர்ச்சியையுடைய,  கடல்போன்று - சமுத்திரம்போன்று, (அதாவது :
அச்சந்திரனைக்கண்ட சமுத்திரம் பொங்கி ஒலிப்பதுபோல), அந்தமில்
- முடிவில்லாத,  உவகை  -  ஸந்தோஷத்தை,  எய்த  -   அடைய,
(அவனுக்கு  அவனுடைய  தாய்தந்தையர்),   அரதனாயுதனென்றார் -
இரத்தினாயுதனென்று நாமகரணம் செய்தார்கள், எ-று. (25)

 774. வாரிசூழ் வையத் தின்கண் வறுமையைக் கெடுக்க வந்த
     பாரிசா தத்தின் கன்றிற் பரிவின்றி வளர்ந்து மைந்தன்
     வேரிசூழ் கூந்த லாரை வேள்வியா லெய்தி யின்பம்
     பூரியா மனத்த னாகிப் போகத்தி னாற்ற வீழ்ந்தான்.

    (இ-ள்.)   வாரிசூழ்  -  சமுத்திரஞ்சூழ்ந்த, வையத்தின்கண் -
இப்பூமியில், வறுமையை - தரித்திரத்தை,  கெடுக்க - நீக்கும்படியாக,
வந்த - தோன்றிய, பாரி