(இ-ள்.)
(அவ்வாறு) அபராஜிதன் - அபராஜித மஹாராஜன்,
மாதவனாயின பின் - மஹாதபஸைச் செய்யும்படியான
முனிவரனான
பின்பு, சகராயுதனும் -
சக்ராயுதராஜனும், உவரோதம்
-
உவர்ச்சமுத்திரத்தை, உடுத்த - ஆடையாக
வுடுத்திய (அதாவது :
சமுத்திரத்தாற் சூழப்பட்ட), நிலத்தையெலாம்
- பூமிராஜ்யத்தை
யெல்லாம், தளராமை - தளர்ச்சியில்லாமல் (அதாவது : துன்பமின்றி),
நிறுத்தி - ஸ்தாபித்து, அவன் - அச்சக்கராயுதன், அபராஜிதனும் -
பிறவரசர்களால் ஜெயிக்க முடியாதவனும்,
ஆயினன் - ஆனான்,
எ-று. (30)
779. பொறிமீ துபுலத் தெழுபோ கமெலா
மிறவா திரவும் பகலும் நுகரா
நிறையா தொழியப் பினெருப்
பினிடை
விறகே யிவையென் றுவெறுத் தனனே.
(இ-ள்.) (அவ்வாறானபின்),
பொறி - பஞ்சேந்திரியங்களால்,
புலத்து - விஷயவஸ்துக்களின், மீது - மேலே, எழும் - உண்டாகிய,
போகமெலாம் - போ கோபபோகங்களை
யெல்லாம், இறவாது -
நீங்காமல், இரவும் - இராத்திரியிலும், பகலும் - பகலிலும், நுகரா -
அனுபவித்தும், நிறையாது - திருப்தியாகாமல், ஒழிய - நீங்க, பின் -
பிறகு, இவை - இந்த இந்திரியவிஷய
போகங்களானவை,
நெருப்பினிடை - அக்கினியிடத்தில் அகப்பட்ட, விறகே யென்று -
விறகுக்குச் சமானமே யாகுமென்று,
வெறுத்தனன் - அவற்றை
வெறுத்து வைராக்கிய முற்றான், எ-று. (31)
780. அறிவா லறியா வறியா வதனாற்
பிறிதாம் வினையைப் பிணியா வதனா
னிறையா துநிலா துவிருப் புறநின்
றுறவே முயல்வா ருணர்வொன் றிலரே.
(இ-ள்.) (அங்ஙனம் வைராக்கியமுற்றபின்), அறிவால் - ஸம்மியக்
ஞானத்தினாலே, அறியா - (ஜீவாதி
பதார்த்தங்களை ஹேயோ
பாதேய ஸ்வரூபந்தெரிந்து வீதராகத் தன்மையாகிய
சுத்தோபயோகம்
பெற) அறியாத, அதனால் - அத்தன்மையினால், அறியா -
வஸ்து
ஸ்வரூபமறியாத, பிறிதாம் - தனது
ஸ்வரூபத்துக்குவேறாகிய,
வினையை - புத்கல பரியாயமாகிய
கர்மங்களை, பிணியா -
பந்தித்துக்கொண்டு, அதனால் -
அக்கர்மங்களின் பந்தத்தால்,
நிறையாது - ஸம்சார விஷய சுகமானது நிறைந்து திருப்தியாகாமலும்,
நிலாது - நிற்காமல் அனித்திய
ஸ்வரூபமாகவும், விருப்பு -
ஆசையானது, உற நின்று - பொருந்த நின்று, உறமுயல்வார் -
இந்திரிய விஷய சுகமடைய முயற்சிப்பவர், உணர்வொன்றிலர் -
ஸம்மியக் ஞானோதயமில்லாத அஞ்ஞானிகளாவர், எ-று. (32)
|