781. வினையான் வருமின் பம்வெறுத் திடவே
தனையே நுதலிற் தளரா வகையா
னினைவான் வினைநீங் கிநிறைந்
துடனே
புனையா துபொருந் துமனந் தசுகம்.
(இ-ள்.)
வினையால் - கர்மங்களினால், வரும் -
வருகின்ற,
இன்பம் - ஸம்ஸார சுகத்தை, வெறுத்திட - வெறுத்துநீக்க, தனையே
- தனது ஆத்மபாவனையையே, நுதலி
- கருதி, தளரா -
தளர்ச்சியடையாத, வகையால் -
விதத்தினாலும், நினைவால் -
தியானத்தாலும், வினை - கருமங்கள், புனையாது - சேராமல், நீங்கி -
விலகி, உடனே - அப்பொழுதே,
அனந்த சுகம் - அனந்த
ஸௌக்கியமானது, நிறைந்து - நிறைவுபெற்று,
பொருந்தும் -
அடையும், எ-று. (33)
782. முடிவில் லதுமுன் னமுமென் கணதற்
றடையாம் வினையைத் தவநீ தியினிற்
றடைவன் னினியென் றரசன்
னினையா
வடிவே லவன்வச் சிரவா யுதன்மேல்.
(இ-ள்.) (ஆதலின்), முன்னமும்
- முந்தியும், முடிவில்லது -
முடிவில்லாததும், என்கணதன் - என்னிடத்துள்ள
ஆத்மஸ்வபாவ
குணத்தின், தடை - தடையானதும், ஆம் - ஆகிய,
வினையை -
பாவகர்ம திரவியகர்மங்களை, தவநீதியினில் - தபோநீதியால், இனி -
இனிமேல், தடைவன் - தடைசெய்வேன், என்று -
என்று, அரசன் -
சக்ராயுர மஹாராஜன், நினையா -
நினைத்து, வடிவேலவன் -
கூர்மைபெற்ற வேலாயுதத்தை யுடையனவாகிய, வச்சிரவாயுதன்
மேல்
- தனது குமாரனாகிய வஜ்ஜிராயுதன்மேலே, எ-று.
இதுவும் அடுத்தசெய்யுளும்
குளகம். (34)
783. முடியும் படியும் முதலா யினவைத்
தடைவே லரசன் னபரா சிதனாம்
வடுவின் முனிவன் னடிமா மலரை
முடியின் னணியா முனியா யினனே.
(இ-ள்.) முடியும் -
கிரீடமும், படியும் - பூமியும், முதலாயின -
முதலாக உள்ள இராஜ்ஜிய சம்பந்தமானவைகளை யெல்லாம்,
வைத்து
- ஸ்தாபிதம் செய்து, அடை - கையிற்
பொருந்திய, வேல் -
வேலாயுதத்தையுடைய, அரசன் -
சக்ராயுத மஹாராஜன்,
அபராசிதனாம் - அபராஜிதனென்னும் பெயரை
யுடையவனாகிய,
வடுவில் - குற்றமில்லாத, முனிவன் - முனிவரனது, அடி - பாதமாகிற,
மா - பெருமை பொருந்திய, மலரை - தாமரைமலரை, முடியின் - சிரசில், அணியா -
|