366மேருமந்தர புராணம்  


 

அணிந்து,    (அதாவது :   அவனடியைச்   சிரசினால்   வணங்கி),
முனியாயினன் -  முனிவனாகி  ஜிநதீக்ஷையைக் கொண்டனன், எ-று.
(35)

வேறு.

 784. சக்கரா யுதனும் போகித் தாதைதன் பாதஞ் சார்ந்து
     மிக்கமா முனிவ னாகி வெள்ளிடை யாதி யோகி
     னிற்கும்வெவ் வினைக ணீங்க விராப்பகல் படிம நின்று
     பக்கநோன் பிரதி யோடும் பாவனை பயின்று சென்றான்.

   (இ-ள்.) (அவ்வாறு), சக்கராயுதனும் - சக்ராயுதவரசனும், போகி -
இராஜ்யத்தினின்றும்  நீங்கிப்போய்,  தாதைதன் -  தனது பிதாவாகிய
அபராஜித  முனிவரனுடைய,   பாதஞ்சார்ந்து  -  பாதத்தையடைந்து
நமஸ்கரித்து,   மிக்க   -   மிகுதியாகிய,  மா  -  பெருமையுடைய,
முனிவனாகி   -   முனிவரனாகி,   வெவ்வினைகள் -  கடுமையான
வினைகள்,  நீங்க  -   விலகும்படியாக,   வெள்ளிடையாதி  நிற்கும்
யோகின்  -    வெள்ளாகாசத்தில்   நிற்றல்   முதலாகிய  திரிகால
யோகங்களிலும்,    இராப்பகல்   -   இரவும்   பகலும்,  படிமம் -
பிரதிமாயோகத்திலும்,    நின்று    -    நின்று,   பக்கநோன்பு  -
பட்சோபவாஸம்      மாஸோபவாஸங்களிலும்,     இரதியோடு   -
சந்தோஷத்தோடு கூடி, பாவனை - ஆத்ம பாவனையிலும், பயின்று -
பழகி, சென்றான் - சென்றனன், எ-று. (36)

 785. நெறிவழி யெங்குஞ் செல்லு மீட்சிநற் படர்ச்சி நின்ற
     செறிவினிற் பொறிக ளாறுஞ் செறித்தசய் யமத்த னாகி
     யறுவகைக் காய மோம்பி யருள்புரி யடக்கத் தோடும்
     மறுதா வெறியுஞ் சிந்தை வழுவறத் தழுவி நின்றான்.

    (இ-ள்.)  (அவ்வாறு  சென்று  பின்னரும்),  நெறிவழியெங்கும் -
விஷயவழிகளினிடத்தெங்கும்,   செறிவினில்   -  சேர்க்கையினாலே,
செல்லும் -  செல்லுகின்ற,  பொறிகளாறும்  - ஷட் இந்திரியங்களும்,
மீட்சி -  அவைகளினின்றும்   மீளுதலாய்,   நின்ற  -  நிலைபெற்ற,
நற்படர்ச்சி,     ஸம்மியக்சாரித்திரத்தில்,    செறித்த   -    சேர்த்த
சய்யமத்தனாகி     -      விஷயஸம்யமத்தை      யுடையவனாகி,
அறுவகைக்காயம்  -   ஷட்ஜீவனிகாயங்களை,  ஓம்பி  -  ரக்ஷித்து,
அருள்புரி -   ஜீவதயவைச்செய்கின்ற,  அடக்கத்தோடும் -  பிராணி
ஸம்யமத்தோடுங்   கூடி,   மறுதரவு  -   ஆத்மகுணத்தைத்  தடை
செய்யும்படியான கர்மங்களை, எறியும் - கெடுக்கும் படியான, சிந்தை
- 1தருமத்தியானத்தை,    வழுவற    -    குற்றமற,   (  அதாவது
நழுவுதலில்லாமல்),  தழுவி -  சேர்ந்து,  நின்றான் - நிலைபெற்றான்,
எ-று.) (37)
________________________________________________
1தருமத்தியானத்தின்   நாமங்களையுங்   குணங்களையும்   பதார்த்த ஸாரத்தில் 30-வது உபயோகாதி காரத்தில் கண்டு கொள்க.