சக்கராயுதன் முத்திச் சருக்கம் 369


Meru Mandirapuranam
 

     (இ-ள்.)     அணுவினால்    -       புத்கலத்திரவியத்தின்
ஜகன்னியாம்சமாகிய பரமாணுவினால்,  அளக்க -  அளக்குமிடத்தில்,
மூன்றுக்கு - (ஜீவ, தர்ம,  அதர்மமென்கிற) இம்மூன்று திரவியங்கட்கு,
அயங்கியபதேசமாகும் - அஸங்கியாதப் பிரதேசமாகும், அணுவினுக்கு
- புத்கல   பரமாணுவுக்கும்    கால  பரமாணுவுக்கும்,  ஏகமாகும் -
ஏகப்பிரதேசமாகும்,  ஆகாயம் -  ஆகாசத் திரவியமானது, அனந்தம்
தேசம்   -    அனந்தப்   பிரதேசமுடையதாகும்,    இணையிலா -
ஒன்றோடொன்று   சேர்தலில்லாமல்  ஏகப்பிரதேசியாய்  இருக்கின்ற,
காலம் -   நிச்சய   பரமாணுத்திரவிய   காலமானது,    மூன்றாம் -
(வியவஹார  பரியாயத்தினால்,  பூத, பவிஷ்ய, வர்த்தமான மென்னும்)
மூன்றாகும், (அதுவன்றியும்), ஏற்று - உத்ஸர்ப்பிணியென்றும், இழிவு -
அவஸர்ப்பிணியென்றும்,    ஆய்     -     ஆகி,  அனந்தம்   -
முடிவில்லாததாகும், பணிவிலாப்பவம் - குறையாத ஸம்ஸாரப்பிறப்பில்,
(நீங்காமல் இருக்கின்ற),    கருப்பம்    -   கர்ப்பமும், உப்பாதம் -
உபபாதமும்,    மூர்ச்சனை -     மூர்ச்சனையும், (ஆகிய   திரிவித
ஜன்மஸ்தான    விவரங்களையும்),   நினைந்தான் -     நினைத்து
ஹேயஸ்வரூபத் தியாகமும் உபாதேயஸ்வரூபஸ்வீகாரமும்  செய்தான்,
எ-று. (41)

 790. உதயத்தி னுபச மத்திற் கேட்டிற்கேட் டவிவு தன்கட்
     பதமொத்த பரிணா மத்தாம் பஞ்சபா வத்தை யுன்னி
     யிதமுத்தி யிதற்கு பாய மிரதனத் திரயந் தீய
     மதமதற் குபாயந் தன்னை யிதமின்மை மனத்துள் வைத்தான்.

   (இ-ள்.)     உதயத்தின்    -    ஏக     விம்சதி    பிரகாரம்
கருமோதயத்தினாலாகிய   உதய    பாவத்தினாலும்,  உபசமத்தில் -
(ஸஜ்ஞி       பஞ்சேந்திரிய       பரியாப்தி       ஜீவன்களுக்கு
காலலப்தியாதிப்ராப்திகளினால்    ஸப்தவித  தர்சன    மோஹனீய
கருமங்களும்,   மற்ற சாரித்திர மோஹனீய கருமங்களும் உபசமத்தை
யடைந்த  காலத்தாகும்)  உபசமபாவத்தாலும்,  கேட்டில்   - (ஞான
தர்சனாவரணாந்தராய      மோஹனீயங்களது          நிரவசேஷ
க்ஷயத்தினாலாகிய    நவவிதமாகிய)    க்ஷாயிக      பாவத்தாலும்,
கேட்டவிவுதன்கண்  - க்ஷயோபசம பாவத்தினிடத்தாலும், (அதாவது :
சில கருமங்களது   கேட்டினாலும்,  சில  உபசமத்தாலுமாகும்  மிசிர
பாவத்தாலும்),   பதமொத்த  - பதத்தில் பொருந்திய, பரிணாமத்து -
திரிவித பாரிணாமிக பாவத்தாலும், ஆம் - ஆகின்ற, பஞ்சபாவத்தை
- பஞ்சவிதமான பரிணாமங்களை,   உன்னி -  தியானித்து,  இதம் -
ஆத்மனுக்கு இதமாகிய, முத்தி - மோட்ச ஸ்வரூபத்தையும், இதற்கு -
இந்த   மோட்ச   ஸ்வரூபத்திற்கு   உபாயம்  -     மார்க்கமாகிய,
இரதனத்திரயம் -   (ஸம்மியக்   தர்சன,   ஸம்மியக்ஞான, ஸம்மியக்
சாரித்திரமாகிய வியவஹார நிச்சய) ரத்னத்திரய ஸ்வரூபத்தையும், தீய
மதம் -   மித்தியா    மதத்தினாலாகிய     பிறவித்துன்பத்தையும்,
அதற்குபாயம்   தன்னை  -  அதற்கு  மார்க்கமாகிய மித்தியாதர்சன
அஞ்ஞான   விபரீத   சரணத்தையும்,  இதமின்மை  -  நன்மையில்
லாததனையும்,  மனத்துள் -  மனதில்,  வைத்தான் -   இருத்தினான்
(அதாவது :  இந்த ஸம்ஸார தத்காரண மோட்ச தத்காரணங்களையும்
தியானித்தான்), எ-று.