இராநின்றவைகளிற் பிறப்பனவாம் (அதாவது: மஹாமஸ்யங்களும்
ஆடவர்களும் ஏழாநரகபரியந்தமும், ஸ்திரீகள் ஆறாநரகபரியந்தமும்,
சதுஷ்பாத ஜீவன்கள் ஐந்தாநரகம் வரையிலும், ஸர்ப்பம்
முதலியவைகள்
நான்காம் நரகம் வரையிலும், பறவை முதலியவைகள்
மூன்றா நரகம்
வரையிலும், ஆமை முதலியவைகள் இரண்டாம் நரகம்
வரையிலும்,
ஓணான் முதலியவைகள் முதல் நரகம் வரையிலும்
பிறப்பனவாம்; இவை), கீழ்செல்லா - இப்பொழுது சொன்ன
கிரமங்களுக்குக் கீழே செல்லமாட்டா, மேற்சொல்லும் -
ஒன்றிற்கொன்று மேற்பட்டவைகளிலேயே பிறக்கும், மேல் நான்கு -
முதல் நான்கு நரகங்களினின்றும் வரும் ஜீவன்களில் மனிதராகப்
பிறப்பவை, வீடு ஆம் - கர்மக்ஷயம் செய்து மோக்ஷத்தையடைந்தாலும்
அடையும், (மற்ற மூன்றிலுமிருந்துவரும் ஜீவன்கள்) முறையே -
கிரமமாக, தவம் விரதம் விலங்கு ஆம் - தவத்திலும் விரதத்திலும்
விலங்கினும் சார்வனவாம் (அதாவது : ஐந்தாம் நரகத்தினின்றும் வரும்
ஜீவன்களின் மனிதராய்ப் பிறப்பவை தவம்கொண்டாலும் கொள்ளும்,
கர்மக்ஷயம் செய்யமாட்டா; ஆறாம் நரகத்தினின்றும் வரும் ஜீவன்கள்
மனிதர்களாகவாவது விலங்குகளாகவாவது பிறந்து ஏகதேச
விரதங்களை ஸ்வீகரித்தாலும் ஸ்வீகரிக்கும், தபம்சேரா; ஏழாம் நரகத்தினின்றும் வரும் ஜீவன்கள் விலங்குகளாகவே பிறப்பனவாம்),
எ-று. (78)
79. இந்திய மொன்றினா லுலக மெங்குமா
மைந்தினா னாளிகை யகத்து வாழுமே
யந்தினோ டிரண்டரைத் தீப மாழிமூன்
றிந்திய நான்குமூன் றிரண்டி னெல்லையே.
(இ-ள்.) இந்தியமொன்றினால் - ஏகேந்திரிய ஜீவன்களினால்,
உலகமெங்குமாம் - இந்த உலகமாகிய முந்நூற்று நாற்பத்து மூன்று
ரஜ்ஜுப் பிரமாணமுமாக நின்றது, ஐந்தினால் - பஞ்சேந்திரிய
ஜீவன்களால், நாளிகையகத்து - த்ரஸநாளிகைக்குள், வாழும் -
வாழாநிற்கும், அந்தினோடு - அந்தியத்தில் இராநின்ற
ஸ்வயம்புரமணார்த்தத்வீபத்தோடு, இரண்டரைத்தீபம் - இரண்டரை
த்வீபமும், ஆழிமூன்று - மகாலவண, காளோதக,
ஸ்வம்புரமணமென்னும் மூன்று சமுத்திரங்களும், இந்தியநான்கு -
சதுரிந்திரிய ஜீவன்களினுடையவும், மூன்று - த்ரீந்திரிய
ஜீவன்களினுடையவும், இரண்டின் - த்வீந்திரிய ஜீவன்களுடையவும்,
எல்லை - பிறப்பு ஸ்தானங்களாம், எ-று. (79)
80. இரண்டரைத் தீவினுண் மனித னாங்கண்டந்
திரண்டநூற் றெழுபதிற் றிரு வறத்தனா
முரண்கெடக் குலங்களோர் மூன்றிற் றோன்றினாற்
றிரண்டதீ வினையாடச் சித்தி யெய்துமே. |