சக்கராயுதன் முத்திச் சருக்கம் 371


Meru Mandirapuranam
 

   னுரையுணா வகையிற் பின்னா ளக்கர விடத்திற் பாவ
   நிரையினா லுதயஞ் செய்ய நின்றிடுந் துன்ப மென்றான்.

   (இ-ள்.)  (அவ்வாறு பாவனை செய்த பின்பு), இரதனாயுதனை -
தன்   புத்திரனாகிய  இரத்தினாயுத  குமாரனை, கூவி - அழைத்து,
வேந்தன் -  வஜ்ராயுத  மகாராஜன்,  முடியினை  -   பட்டாபிஷேக
முடியை,  ஈந்து  -  அவனுக்குக்  கொடுத்து,  (அவனை   நோக்கிப்
புத்திரனே!),    விரமனா -   (தத்துவந்தெளிந்து),   வைராக்கியத்தில்
பொருந்தாத,    மனத்தனாகி    -   மயக்கமுற்ற மனதுடையவனாகி,
வேட்கையின் -   மோஹராகத்தில்,    வீழ்ந்து  போகின் - சேர்ந்து
சென்றால்,  உரையுணா வகையில்  -  சொல்ல முடியாத தன்மையில்,
பின்னாள்    -   பின்னாளில்,   அக்கரவிடத்தில்  -   பெரிதாகிய
விஷம்போல,     பாவம்   -   பாபகர்மமானது,    நிரையினால் -
வரிசைக்கிரமத்தால், உதயஞ்செய்ய - உதயத்தைக் கொடுக்க, துன்பம்
- துக்கமானது,  நின்றிடும்  -  ஆத்மனிடத்தில்  நின்று   வருத்தும்,
என்றான் - என்று போதித்தான், எ-று. (45)

 794. திருமலி யார மாலை திளைக்குந்திண் புயத்த ராகி
     யுருமலி களிற்றி னுச்சி யோங்கிய குடையி னீழல்
     வருமவர் முன்பு தாஞ்செய் நல்வினை மாய்ந்த போழ்தி
     னெரியுறு திருவி னொன்னார்க் குழையரா யியல்வர் கண்டாய்.

    (இ-ள்.) (அவ்வாறு  சொல்லிப் பின்னரும்),  திரு - அழகினால்,
மலி - நிறைந்த, ஆரம் -  (முத்தாஹார,  இரத்தினாஹார முதலாகிய)
ஹாரங்களும்,   மாலை   - (பூமாலை,   பொன்   மாலை  முதலிய)
மாலைகளும்,   திளைக்கும்  -   சேர்ந்து   பிரகாசிக்கின்ற, திண் -
கெட்டியாகிய,   புயத்தராகி   -   புஜத்தையுடையராகி,   உருமலி -
ரூபம்மிகுந்த,   களிற்றினுச்சி    -    யானையின்பேரில், ஓங்கிய -
பெரிதாகிய,  குடையினீழல் -  வெள்ளைக் குடையினுடைய நிழலிலே,
வருமவர் - ஏறி உலாவருமவர்களும், முன்பு - பூர்வத்தில், தாம் செய்
- தாங்கள் செய்த, நல்வினை -  புண்ணியவினை, மாய்ந்த போழ்தில்
- உலர்ந்த காலத்தில்,   எரியுறு -  அக்னியையடைந்த,  திருவின் -
ஐஸ்வரியம்போல,  ஒன்னார்க்கு  -  பகைவர்களுக்கு,  உழையராய் -
வேலைக்காரர்களாகி, இயல்வர் -  செல்வார்கள், கண்டாய் - இதனை
நீ பார்த்திருக்கின்றாய், எ-று. (46)

 795. பஞ்சநல் லமளி யின்கட் பருமணிப் பவழத் தின்காழ்
     மஞ்சின்மே லஞ்சொ லார்கள் வருடமா போற்று யின்றார்
     முன்புதாஞ் செய்த தீமை முளைத்துழிக் கணத்தின் வேறாய்த்
     துஞ்சினார் போல மாலைத் துகணிலத் துறைவர் கண்டாய்.

   (இ-ள்.)   பஞ்ச  -   1ஐந்துவிதமான,   (அதாவது  :   ஐவகை
வஸ்துக்களால் செய்யப்பட்ட), நல் - நன்மையாகிய, அமளியின்கண் -
படுக்கை மெத்தையி