சக்கரா யுதனும் பின்னைத் தடவரை
முடியைச் சார்ந்து
சுக்கிலத் தியானந் தன்னால் வினையிரு டூர்க்க லுற்றான்.
(இ-ள்.)
(அதன்மேல்), திக்கயமலையைப்போல
- திக்கஜ
பர்வதங்களைப் போல (அதாவது : திக்கஜ பர்வதங்கள்
பெரிதாகிய
மகம்மேரு பர்வதத்தின் சமீபத்தில் சூழ்ந்திருப்பதுபோல்), சின்னாள் -
சிலகாலம், (ஆச்சாரியரோடு கூடி,
வர்த்தித்து), சிந்தனை -
தியானத்தை, திருத்தி -
செம்மைப்படுத்தி, அர்க்கன் -
ஸூர்யனானவன், வந்து - கிழக்கில் வந்து, உதயத்துச்சி - உதயகிரி
சிகரத்தில், அடைவதேபோல் -
சேர்ந்து பிரகாசிப்பதுபோல,
சக்கராயுதனும் - சக்ராயுத முனியும்,
பின்னை - பிறகு, வந்து -
சங்கங்களினின்றும் தனியாகிவந்து, தடவரை
- பெரிதாகிய ஒரு
பர்வதத்தினுடைய, முடியை - உச்சியை,
சார்ந்து - அடைந்து,
சுக்கிலத் தியானந்தன்னால் -
சுக்கிலத்தியான ஜோதியால்,
வினையிருள் - கர்மங்களாகிய அந்தகாரத்தை, தூர்க்கலுற்றான் -
செறுத்தலைப் பொருந்தினான், எ-று. (55)
804. வரிசையிற் சுருக்கி வையத் துச்சியார் வடிவு தன்னைப்
புருவத்தி னிடையின் மூக்கி னுனியிற்றான் பொருந்த வைத்துத்
திரிவித யோகி னோடுஞ் சென்றுவந் தாடுஞ் சிந்தை
யுருவமற் றிதனை யுன்ன வினைகளே ழுடைந்த வன்றே.
(இ-ள்.) (அவ்வாறு
பொருந்தியவன்),
வரிசையில் -
தியானத்தினது வரிசையால்,
சுருக்கி - (பந்த ஹேதுவாகிய
பரிக்கிரகங்களை யெல்லாம்) குறைத்து (அதாவது :
திரிகுப்தியோடுங்
கூடி இந்திரியங்களை விஷயங்களில் செல்லவொட்டாமல்
தடுத்து,
ஹேயஸ்வரூபத்தியாகஞ் செய்து), வையத்து
- இவ்வுலகத்தினது,
உச்சியார் - அக்கிரபாகத்தில்
ஸித்திபெற்றிராநின்ற ஸித்த
பரமேஷ்டிகளுடைய, வடிவுதன்னை - ஸ்வரூபமான
சுத்தாத்துமத்
தன்மையை, புருவத்தினிடையின் - இரண்டு புருவங்களின் மத்தியில்,
மூக்கின் நுனியில் - நாசியின் அக்கிரபாகத்தில், பொருந்த வைத்து -
பொருந்தும்படியாக ஸ்தாபித்து, தான் - தான்,
திரிவிதயோகினோடும்
- மனவசன காயமென்னும் மூன்றுவித யோகத்தோடு,
சென்று -
உயர்ந்த மார்க்கத்திற்போய்,
(மற்ற பந்த ஹேதுக்களாகிய,
மித்தியாத்துவ, அவிரத, பிரமாத, கஷாயமென்னும்,
பிரத்தியயங்களை
விடுத்து), உவந்து - (ஆத்மபாவனையில்) சந்தோஷித்து,
ஆடும் -
அலைகின்ற, சிந்தை - சிந்தையின்,
உருவமற்று - வடிவமற்று
(அதாவது : ஏகசிந்தையாய் ஸ்வஸம் வேதனஞான தியானத்தினால்),
இதனை - உபாதேயரூபமாகிய ஸித்தஸத்ரஸ
நிச்சய ரத்தினத்திரய
ஸ்வரூபமாகிற) இந்த ஸ்வஸமயத்தை, உன்ன - (நிர்விகல்பவீதராக
பரிணதனாகி) பாவிக்க, வினைகளேழ் - (தர்சன மோஹனீயமாகிய)
1ஸப்த பிரகிருதி கருமங்கள், உடைந்த - கெட்டன, எ-று.
(56)
1ஸப்த பிரகிருதிகள் - மித்தியாத்துவம், ஸம்மியக்துவம்,
ஸம்மியக் மித்தியாத்துவ பிரகிருதி, அனந்தானு பந்திகுரோத, மான,
மாயா, லோபமென்ற ஏழுமாம்,
|