38மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  இரண்டரைத்தீவினுள்  -  (ஜம்பூ, தாதகி, புஷ்கரார்த்த
மென்னும்)  இரண்டரைத்வீபத்துள்,  மனிதனாம் - மனிதன் பிறப்பான்,
(அதிலும்),  கண்டம்  -  கண்டங்களாக,  திரண்ட - சேர்க்கையாகிய,
நூற்றெழுபதில் - நூற்றெழுபது தர்ம கண்டங்களில், திருவறத்தனாம் -
ஸ்ரீஜிந   தர்மத்தையுடையவன்  பிறப்பான்;  (அவன்)   முரண்கெட -
பாபங்கள்கெட,    குலங்களோர்   மூன்றில்    (பிரம்ம,   க்ஷத்திரிய,
வைசியரென்னும்) முக்குலங்களில், தோன்றினால் - பிறந்தால், திரண்ட
- ஆத்மனிடத்தில் சேர்ந்திரா நின்ற, தீவினை - கருமங்களை, அடா -
ஜெயித்து,  சித்தியெய்தும் - மோட்சத்தை அடைந்தாலும் அடைவான்,
எ-று.                                                  (80)

 81. குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன்
    னுடம்பின தளவுமா முலக மெங்குமா
    மொடுங்குழி புரைதரங் கில்லை யோங்கிய
    விடங்கொளிற் பிளத்தலு மின்ற மூர்த்தியால்.

     (இ-ள்.)  அமூர்த்தியால் -  சீவன்  அமூர்த்தஸ்வபாவமானதால்,
குடங்கையில் - உள்ளங்கையில்  வைத்து  மூடப்பட்ட,  விளக்கென -
தீபத்தைப்போல, கொண்டகொண்டதன் - எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட
தன்னுடைய,    உடம்பினது    -    சரீரத்தினது,     அளவுமாம் -
பிரமாணமுடையதுமாகும், உலகமெங்குமாம்  -  கேவலிஸ  முத்காதம்
பண்ணும்  தண்ட, கவாட, பிரதர, பூர்ணைகளினால்,  பூர்ணையின்கண்
லோக  முழுமையும்   ஒரேசீவன்   ஸூக்ஷ்மகாய   யோகத்தினாலும்
ஆகாநின்றது,     ஒடுங்குழி    -    சீவன்   சிறிதாகிய   சரீரத்தை
யெடுக்குமிடத்தில்,  புரைதரங்கில்லை - மடிப்பாகச் சுருங்கியிருக்கிறது
மில்லை,    ஓங்கிய    விடங்கொளில்   -   பெரிதாகிய   சரீரத்தை
யெடுக்குமிடத்தில்,       பிளத்தலுமின்று     -      விண்டுவிரிந்து
இருக்கிறதுமில்லை, எ-று.

     சப்தசமுத்காதங்களில்   கேவலி   சமுத்காதம்   ஒன்று;  இந்த
சமுத்காதங்களின் விவரங்களை பதார்த்தசார கிரந்தத்தில் முப்பதாவது
அதிகாரத்தில் பார்த்துக்கொள்க.                            (81)

 82. பொறிகளாற் புலத்தெழு போகந் துய்ப்புழி
    யிறுகிய வினைகளுக் கிறைவ னாயபின்
    பிறிதொரு பிறப்பினவ வினைப் பயத்தினுக்
    கிறைவனா மிதுவுயி ரியற்கை வண்ணமே.

     (இ-ள்.)   உயிர்   -   சீவபதார்த்தமானது,   பொறிகளால் -
இந்திரியங்களால்,  புலத்து  -  விஷயங்களில்,  எழும் - உண்டாகிய,
போகம்  -  போகோப  போகங்களை,   துய்ப்புழி  -  (ராகத்வேஷ
மோகங்களால்)    அனுபவிக்குமிடத்தில்,   இறுகிய   -   அதனால்
வந்துசேரப்பட்ட, வினைகளுக்கு - கர்மங்களுக்கு, இறைவனாயபின் -
கர்த்தா வாயிருந்து  பந்தித்துக்கொண்ட பிறகு,  பிறிதொரு பிறப்பில் -
மறுசன்மத்திலும்,