380மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

புஷ்ப   வருஷங்களை,   பொழிந்து  -   சொரிந்து,    உலகுடை -
இந்தத்திரிலோகத்தையும்      ஞானத்துளுடைய,       இறைவன் -
இந்தச்சக்ராயுத    பகவானுடைய,  பாதம்  -  பாதங்களை,  உள்ளம்
மெய்மொழியோ  டொன்றி  -  மன வசன காயங்களோடு பொருந்தி,
நிலையிலா       -        அனித்தியஸ்வரூபமாகிய,      பிறவி -
ஸம்ஸாரப்பிறப்பானது,  நீங்கும்  -  நீங்கும்படியான,  நெறியினால் -
கிரமத்தினால், (கேட்போர் இம்முழக்கம்), அலைகடல் - அலைகளால்
சப்திக்கும்படியான      கடலானது,      முகிலோடு      ஒன்றி -
மேககர்ச்சனையோடு    சேர்ந்து,    முழங்குவதனையது    என்ன -
சப்திப்பதையொப்ப    தாகுமென்று    சொல்லும்படி, (கெம்பீரமாகிய
துவனிகளால்),    துதிகள்    -   ஸ்தோத்திரங்களை, சொன்னார் -
மேற்கூறியபடி சொல்லினார்கள், எ-று. (61)

 811. ஆயிடை யெண்பத் தஞ்சு வினைகெட்ட வக்க ணத்தே
    போயுல குச்சி புக்கான் பொருந்தியெண் குணங்க ளோடுந்
    தூயவான் மலர்சொ ரிந்து துதித்துட னமரர் போனார்
    மாயமி றவத்தி னான்வச் சிராயுதன் வணங்கிப் போனான்.

   (இ-ள்.)   ஆயிடை  -   அப்பொழுது,   எண்பத்தஞ்சுவினை -
எண்பத்தைந்தாகிய  அகாதிகருமங்கள், கெட்ட - சக்ராயுதபகவானை
விட்டு      நீங்கின,      அக்கணத்தே      - (    அவ்விதமாக
சுத்தோபயோகதியானத்தால்  ஸமயஸார லாபமடைந்த) அப்பொழுதே,
எண் குணங்களோடும் -  அனந்த  ஞானாதி அஷ்டகுணங்களோடும்,
பொருந்தி -  சேர்ந்து,  போய்  - (சரீரம்நீங்கி     ஊர்த்துவகதிஸ்வ
பாவனாய்)  சென்று,  உலகுச்சி  - மூன்றுலோகத்திற்கும் உச்சியாகிய
ஸித்திக்ஷேத்திரத்தை,  புக்கான்  -  சக்ராயுதபகவான்  அடைந்தான்,
(அப்பொழுது,)  தூய  -  பரிசுத்தமாகிய,  வான் -  சிறந்த,  மலர் -
புஷ்பங்களை,  சொரிந்து  -  வருஷித்து,  துதித்து  -  (பரிநிர்வாண
பூஜைசெய்து)  ஸ்தோத்திரம்  பண்ணி,  உடன் -  உடனே, அமரர் -
சதுர்நிகாய   தேவர்களும்,   போனார்   -   தங்கள்    தங்களிடம்
சென்றார்கள்,   மாயமில்   -   மாயாச்சாரமில்லாத     (அதாவது :
உண்மையாகிய), தவத்தினான் - தபஸையுடையவனான, வச்சிராயுதனும்
- வச்சிராயுத    மஹாமுனிவரனும்,    வணங்கி     -  (பரிநிர்வண
பூஜாகாலத்தில்  சக்ராயுதபகவானை)  தொழுது,  போனான்  - பிறகு
தான் ஏகவிஹாரியாகித் தபோவனத்திற் சென்றான், எ-று. (63)

 812. வணிகனாய்த் தரும மேவி மன்னனாய் மாத வத்தா
    லிணையிலாக் கேவச் சத்து ளமரனா யிங்கு வந்து
    தணிவிலாத் தவத்தின் மாற்றை யெறிந்துசக் கராயு தன்போ
    யிணையிலா வுலகம் புக்கா னிதுவறத் தியற்கை யாமே.

    (இ-ள்.)   வணிகனாய்   -   பூர்வம்   பத்திரமித்திரனென்னும்
வணிகனாயிருந்து,  தருமம் -  (தான முதலாகிய சிராவக) தருமத்தை,
மேவி - பொருந்தி, மன்னனாய் -