றிரையு டுத்தவிப் படிமி சைத்தன
தரசு நிற்பதே யாக வெண்ணுமே.
(இ-ள்.) விரைசெய் - வாசனையை வீசுகின்ற, தாரவன் -
மாலையை யணிந்திராநின்ற இரத்தினாயுத வரசனானவன், அரசும் -
இராஜ்யமும், இன்பமும் - ஸௌக்கியமும், கிளையும் - பந்து
ஜனங்களும், ஆயுவும் - ஆயுஷ்யமும், வீயுமென்று - நாசத்தை
யடையுமென்று, எணான் - நினைக்காதவனாகி, திரையுடுத்த -
ஸமுத்திரஞ் சூழ்ந்த, இப்படிமிசை - இப்பூமிமேல், தனது -
தன்னுடைய, அரசு - ராஜ்யமானது, நிற்பதேயாக - ஸ்திரமான நித்திய
ஸ்வரூவத்தையுடையதாகவே, எண்ணும் - நினைப்பவனாயினான்,
எ-று. (3)
816. பொறியின் போகமும் புண்ணி யத்தின்வந்
துறுவ தென்றெணா னும்ப ரின்பமும்
மறுவில் வீடுமற் றில்லை மாய்ந்தவர்
பிறவி யும்மிலை யென்று பேசுமே.
(இ-ள்.) பொறியின் போகமும், (இந்த ஸம்ஸாரப்
பிறப்பிலுண்டாகும்) இந்திரிய விஷய சுகமும், புண்ணியத்தின் -
சுபோபயோக புண்ணியத்தினால், வந்து - ஆஸ்ரவமாகி வந்து,
உறுவதென்று - பந்தித்து நின்று உதயத்தைக் கொடுப்பதென்று,
எணான் - நினைக்காதவனாகி, உம்பரின்பமும் - தேவ சௌக்கியமும்,
மறுவில் - குற்றமில்லாத (அதாவது : பந்த குணமற்ற), வீடும் -
மோட்சமும், இல்லை - மாய்ந்தவர் - (இவ்வுலகத்தில்)
இறந்துபோனவர்கள், பிறவியும் - மறுபடியும் பிறக்கின்றதும், இலை -
இல்லை, என்று - என்றும், பேசும் - சொல்பவனாயினான், எ-று. (4)
817. கற்ற மாந்தராய்க் காமச் செல்வத்திற்
பெற்ற வின்பத்தைப் பிழைக்க விட்டுப்போய்
மற்று மின்பமேல் வரவ ருந்துத
லுற்ற வூனரி விட்ட தொக்குமே.
(இ-ள்.) கற்றமாந்தராய் - ஞான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட
மனுஷ்யர்களாகி, காமசெல்வத்தில் - இப்போது அழகிய ஐஸ்வரிய
முதலான பலசாதனங்களால், பெற்ற - அடைந்திருக்கின்ற, இன்பத்தை
- சௌக்கியத்தை, பிழைக்கவிட்டு - தவறுதலாக நீக்கிவிட்டு, போய் -
தபஞ்செய்கிறேனென்று போய், மற்றும் - பின்னையும், இன்பம் -
சௌக்கியமானது, மேல் - இனிமேல், வர - அடையும்படியாக,
வருந்துதல் - வருத்தப்படுவதானது, (எப்படியாகின்ற தென்றால்), நரி -
ஒரு நரியானது, (ஜலத்தில் கண்ட மஸ்யத்தை இரையாக அடை |