நெருப்பு - தேஜஸ்காயமும், காற்று - வாதகாயமும், என்ற - என்று
சொல்லப்பட்ட, இக்காயமைந்து - இந்த ஐந்து விதமான
காயங்களையும், எய்தி - அடைந்து, வாழும் - வாழ்வனவாகும், எ-று.
‘என்றிக்காயம்" என்பதில் அகரந்தொக்கது. (10)
823. நந்து சிப்பிசங் காதி நாவன
குந்தெ றும்புகோ பாதி மூன்றன
வந்து தும்பிவண் டாதி நாலவைந்
திந்தி யம்பசுநரர் நரகர் தேவராம்.
(இ-ள்.) நந்து - நத்தையும், சிப்பி - சிப்பியும், சங்கு - சங்கும்,
ஆதி - முதலாகவுள்ளவைகள், நாவன - ரஸனேந்திரியத்தையுமுடைய
த்வீந்திரிய ஜீவன்களாகும், குந்து - கிந்தி நடக்கின்ற, எறும்பு -
எறும்பினங்களும், கோபாதி - பட்டுப்பூச்சி முதலாகிய இனங்களும்,
மூன்றன - த்ரீந்திரியத்தையுடைய ஜீவன்களாகும், அந்து - அந்தும்,
தும்பி - தும்பிகளும், வண்டு ஆதி - வண்டு முதலாகியவைகளும்,
நால - (ஸ்பரிச, ரஸ, க்ராண, சக்ஷுவென்னும்)
சதுரிந்திரியங்களையுடைய ஜீவன்களாகும், பசு - பசுக்களும், நரர் -
மனுஷ்யர்களும், நரகர் - நாரகர்களும், தேவர் - தேவர்களும், (ஆகிய
ஜீவன்கள்), ஐந்திந்தியம், - பஞ்சேந்திரிய ஜீவன்கள், ஆம் - ஆகும்,
எ-று. (11)
824. உழுதல் கல்லுத லடைத்த லோடுகாய்
தழல்க ளாதிமண் ணுயிர்கள் மாய்ந்திடு
மழலை யாற்றுத லவித்த லாதியாய்த்
தழலு டம்பன தானு மாயுமே.
(இ-ள்.) உழுதல் - பூமியை உழுவதினாலும், கல்லுதல் -
வெட்டுவதினாலும், அடைத்தலோடு - பள்ளம் முதலானவைகளைத்
தூர்ப்பதினாலும், காய்தழல்கள் ஆதி - எரிக்கின்ற அக்கினி
முதலானவைகளாலும், மண்ணுயிர்கள் - பிருத்வீகாய ஜீவன்கள்,
மாய்ந்திடும் - நாசத்தையடையும் (அதாவது : மரணமெய்தும்), அழலை
- உஷ்ணத்தை, ஆற்றுதல் - தணித்தல், அவித்தல் -
அக்னியையவித்தல், ஆதி - முதலாகிய தொழில்கள், ஆய் -
உண்டாவதனால் (அதாவது : இத்தொழில்களைச் செய்வதினால்),
தழலுடம்பனவும் - அக்னியையே சரீரமாக உடைய தேஜஸ்காய
ஜீவன்களும், மாயும் - மரணமடையும், எ-று.
‘தானும்" என்பதில், தான் - அசை. (12)
825. திரைய லைப்பவுந் தீயிற் காய்ச்சவுந்
தரைந னைப்பவுஞ் சாங்க ணீருயிர் |