வைசயந்தன் முத்திச்சருக்கம் 39


 

அவ்வினைப்பயத்தினுக்கு - அந்தக்  கர்மங்களினுடைய  உதயமாகிய
பலனை     அனுபவிப்பதற்கு,    இறைவனாம்    -   போக்தாவாகி
அனுபவியாநிற்கும்,  இது - இந்தச் செய்கை , இயற்கை - அந்தச் சீவ
பதார்த்தத்தினுடைய ஸ்வரூபமாகிய, வண்ணம் - குணமாம், எ-று.  (82)

வேறு.

 83. நாற்றமுஞ் சுவையு மூறும் வண்ணமுந் தன்மைத் தாகிப்
    போற்றல்பூ ரித்தல்வாட லுடையதாப் புற்க லந்தான்
    மாற்றிடை யுயிரைப் பற்றி வினைமுத லாகித் துன்ப
    மாற்றவும் செய்து கந்த மணுவுமாய் நிற்ப தாமே.

     (இ-ள்.)    புற்கலந்தான்    -   புத்கலமானது,    நாற்றமும் -
கந்தத்தையும்,  சுவையும் - ரஸத்தையும்,  ஊறும்  -  ஸ்பரிசத்தையும்,
வண்ணமும்   -   வர்ணத்தையும்,  தன்மைத்தாகி   -   தன்னுடைய
ஸ்வபாவத்தில்   அல்லது   நிச்சயத்தினாலுடையதாகி,    போற்றல் -
கூடுவதும்,   பூரித்தல்  -  நிரம்புவதும்,  வாடல் - பிரிவதும்  (ஆகிய
இவைகளை),      உடையதா     -     பரியாயத்தால்     அல்லது
வியவகாரத்தாலுடையதாகி,  மாற்றிடை  -   ஸம்சாரத்தில்  வர்த்தியா
நின்ற,  உயிரை  -  ஸம்சார  சீவன்களை,  பற்றும்  -  பிணிக்கின்ற,
வினைமுதலாகி     -    (ஞாநாவரணாதி    அஷ்டகர்மங்களுக்குக்)
ஆதாரமாகி, துன்பம் - துக்கங்களை, ஆற்றவும் - மிகவும்,  செய்து -
உண்டு   பண்ணி,  கந்தம்  -  ஸ்கந்தங்களாகவும்,    அணுவுமாய் -
அணுக்களாகவும் ஆகி, நிற்பதாம் - இருப்பதாகும், எ-று.

     கந்தம் இரண்டு; சுவை ஆறு; பரிசம் எட்டு; வர்ணம் ஐந்து. (83)

வேறு.

 84. நுண்மையு நுண்மையு நல்ல நுண்மையு
    நுண்மையிற் பருமையும் பருமை நுண்மையு
    மெண்ணரும் பருமையு மிரு பருமையுங்
    கண்ணுறு மணுவினா றாகுங் கந்தமே.

     (இ-ள்.)  கந்தம்  -  ஸ்கந்தமானது,  நுண்மையு நுண்மையும் -
ஸூக்ஷ்ம   ஸூக்ஷ்மமும்,   நல்ல  -  நன்மையான,   நுண்மையும் -
ஸூக்ஷ்மமும்,   நுண்மையிற்   பருமையும்  -  ஸூக்ஷ்ம  ஸ்தூலமும்,
பருமை    நுண்மையும்   -   ஸ்தூல  ஸூக்ஷ்மமும்,  எண்ணரும் -
நினைத்தற்கரிய,   பருமையும்   -     ஸ்தூலமும்,   இருபருமையும்,
ஸ்தூலஸ்தூலமுமென்று,  கண்ணுறும் - கருதப்பட்டிருக்கிற, அணுவின்
- பரமாணுவினாலே, ஆறாகும் - ஆறுவிதமாகும், எ-று.         (84)