வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 391


 

    மில்லை யேதுறக் கத்தொடு வீடெனுஞ்
    சொல்லி னார்சுழ லுங்கதி யும்மிதே.

     (இ-ள்.) நல்வினை  -  புண்ணியவினையென்பதும்,  தீவினை -
பாபவினையென்பதும்,   இன் -    இனிமையாகிய       (அதாவது :
சேதனத்துவத்தையுடைய), உயிர்  - ஜீவத்திரவியமென்பதும், இல்லை -
சர்வதா      சூன்யமாகும்,     இறந்தார்கள்    -    இவ்வுலகத்தில்
மரணமடைந்தவர்கள்,  பிறத்தலும் - மறுபடியும் பிறப்பதும், இல்லை -
கிடையாது,  துறக்கத்தொடு - தேவலோகத்தோடு, வீடு - மோட்சமும்,
இல்லை    -   கிடையாது, எனும்    சொல்லினார்     - என்கின்ற
சொல்லையுடையவர்களும்,   சுழலும்  - சுழல்கின்ற, கதியும் - கதியும்,
இது - இவ்விலங்கு கதியேயாகும், எ-று.                     (24)

837. அரச நீதி யழித்தவம் மன்னனு
     மரச நீதி யழித்த வமைச்சனும்
     புரையி னாற்பிற ரைப்புணர் தீப்பெணும்
     நிரய மெய்தி விலங்கினு நிற்பரே.

     (இ-ள்.)  அரசநீதி   -   இராஜநீதியை,  அழித்த  - கெடுத்த,
அம்மன்னனும்  - அவ்வரசனும், அரசநீதி - இராஜநீதியை, அழித்த -
கெடுத்த,   அமைச்சனும்   - மந்திரியும், புரையினால் - குற்றத்தினால்
(அதாவது : முக்குற்றத் தொன்றாகிய மிகு மோஹபரிணாமோதயத்தால்),
பிறரை  -  அன்னிய    புருடரை, புணர் - சேர்கின்ற, தீப்பெணும் -
கெட்ட    புத்தியையுடைய    ஸ்த்ரீயும்,    நிரயமெய்தி - நரகத்தை
யடைந்தும்,   விலங்கினும்    - (அல்லாமலும் மந்ததரத்தால்) விலங்கு
கதியிலும், நிற்பர் - சேர்வார்கள், (என்பதாம்), எ-று.            (25)

வேறு.

838. அரதனா யுதன்றன் மேக விசயமாம் யானை யந்தப்
     பிரசமார் வனத்தி ருந்த பெருந்தவன் விலங்கின் வாட்கை
     யுரைசெய்தா னிதனைக் கேளா பிறப்பினை யுணர்ந்திட் டூனின்
     விரவிய கவளங் கொள்ளா தொழிந்துவெய் துயிர்த்த தன்றே.

     (இ-ள்.)    (இவ்வாறு),     அந்த     -  முன்     சொன்ன
மனோஹரமென்னும்  பெயருடைத்தாகிய அந்த, பிரசம் - மதுக்களால்,
ஆர்    - நிறைந்த    வனத்து - உத்தி, யான வனத்திலே, இருந்த -
தங்கிய,   பெருந்தவன் -   பெரிதாகிய    தபத்தையுடைய வஜ்ரதந்த
முனிவன்,    விலங்கின்  வாட்கை - திரியக்கதியின் வாழ்க்கையாகிய
ஸ்வரூபத்தை,    உரை    செய்தான் - ஸங்கங்கட்குச் சொல்லினான்,
இதனை   - இந்த விவரத்தினை, அரதனாயுதன் தன் - இராஜாவாகிய
இரத்தினாயுதனுடைய,     மேக    விசயமாம் - மேகவிஜயமென்னும்
பெயரையுடையதாகிய, யானை - பட்டத்து