முனிவன் தன்னை - வஜ்ரதந்த முனிவானை, கண்டு - பார்த்து,
அடிபணிந்து - அவனுடைய பாதத்தில் வணங்கி, சொன்னான் -
(யானைக் குற்றத்தைக்) கூறினான், எ-று. (30)
843. மகரயாழ் வல்ல மைந்த னொருவனைக் கண்ட மற்றப்
புகர்முகக் களிற்றின் மன்னன் முனிவனை வணங்கிப் பின்னை
சிகரமால் யானைக் குற்ற தருளுக வென்று செப்ப
நிகரிலாப் போதி யாற்பார்த் தரசநீ கேண்மோ வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும் அவன்), மகரயாழ் -
மகரயாழென்னும் வீணை வாத்தியத்தில், வல்ல - கைதேர்ந்து
வாசிக்கச் சாமர்த்தியமுள்ள, மைந்தன் ஒருவளை - ஒரு குமாரனை,
கண்ட - பார்த்த, புகர்முகம் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய,
களிற்றின் - யானையைப்போல (அதாவது : சரியான
வீணாகானத்தினால் யானை சந்தோஷமடைந்து ஒருவனுக்கு வசமாகி
ஏவல் செய்வது போல), மன்னன் - இவ்வரசனும், முனிவனை -
வரஜ்தந்த முனிவரனை, வணங்கி - நமஸ்கரித்து (ஸந்தோஷமடைந்து),
சிகரம் - பர்வதம் போன்ற, மால் - பெரிதாகிய, யானைக்கு - எனது
பட்டத்துயானைக்கு, உற்றது - நேர்ந்ததை, அருளாக -
சொல்லியருள்வாயாக, என்று செப்ப என்று சொல்ல, நிகரிலா -
உவமையில்லாத, (அதாவது : உத்கிருஷ்டமாகிய), போதியால் -
அவதிஜ்ஞானத்தால், பார்த்து - அம்முனிவான் ஆலோசித்துப்
பார்த்தறிந்து, அரச - வாராய்ராஜனே!, நீ கேண்மோ - (நான்
சொல்லப்போவதை) நீ கேட்பாயாக, என்றான் - என்று மேலும்
சொல்லத்தொடங்கினான், எ-று. (31)
844. மற்றிந்தப் பரதத் தின்க ணத்தின புரத்தின் மன்னர்
பெற்றியாற் பெரிய மன்னன் பிரதிபத் திரனென் பானாம்
வெற்றிவேல் வேந்தன் றேவி வசுந்தரி விலங்கல் போலுங்
கற்பினாள் புதல்வன் பிரிதி கரனென்பா னொருவ னானான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லத் தொடங்கியவர் அம்மன்னனை
நோக்கி), இந்தப் பரதத்தின்கண் - இந்தப் பரத க்ஷேத்திரத்திலே,
அத்தினபுரத்தின் - அஸ்தினாபுரத்தினது, மன்னர் பெற்றியால் - அரசர்
தன்மையினாலே, பெரிய - உயர்ந்தவனாகிய, மன்னன் -
இராஜனானவன், பிரிதிபத்திரனென்பானாம் - ப்ரீதிபத்திரனென்னும்
பெயருடையவனாகும், வெற்றி - வெற்றிபெற்ற, வேல் -
வேலாயுதத்தைக் கையிற்றரித்த, வேந்தன் - அவ்வரசனுடைய, தேவி -
பட்டத்தரசியானவள், விலங்கல்போலும் - பர்வதம்போற் சலியாத,
கற்பினாள் - பதிவிரதா குணமுள்ளவளாகிய, வசுந்தரி -
வஸுந்தரியென்னும் பெயருடையவளாகும், புதல்வன் -
அவ்விருவருக்கும் புத்திரன், பிரதிகரனென்பான் - ப்ரீதிங்கரனென் |