னும் பெயரினையுடையவனான, ஒருவன் - ஒருத்தன், ஆனான் -
உண்டாயினான், எ-று. (32)
845. சித்திர மதியென் பானாம் மந்திரி துணைவி தீஞ்சொல்
முத்தணி முறுவற் செவ்வாய்க் கமலையாங் கமலை யொப்பாள்
வித்தகப் புதல்வன் றானும் விசித்திர மதியென் பானாம்
மத்தமால் களிற்று வேந்தன் மகனுக்கன் றொருவ னானான்.
(இ-ள்.) மந்திரி - அவ்வரசனுக்கு மந்திரி,
சித்திரமதியென்பானாம் - சித்திரமதி யென்னும் பெயருடையவனாகும்,
துணைவி - அவனது மனைவியானவள், தீஞ்சொல் - தித்திப்பாகிய
வசனத்தையும், முத்து - முத்துக்களின், அணி - அழகைப்பெற்ற,
முறுவல் - பற்களையும், செவ்வாய் - சிவந்த வாயையுமுடையவளாகிய,
கமலை யொப்பாள் - இலக்ஷ்மிதேவிக்குச் சமானமாகிய
அழகையுடையாளாம், கமலையாம் - கமலை என்னும்
பெயருடையவளாகும், வித்தகம் - சாமர்த்தியமுடைய, புதல்வன்தானும்
- (இவ்விருவருக்கும் புத்திரனானவன், விசித்திரமதியென்பானாம் -
விசித்திரமதியென்னும் பெயருடையவனாகும், (இவன்), மத்தம் - மதம்
பொருந்திய, மால் - பெரிதாகிய, களிற்று - யானையையுடைய,
வேந்தன் - அரசனது, மகனுக்கு - புத்திரனாகிய ப்ரீதிங்கர
குமாரனுக்கு, ஒருவனானான் - ஒப்பற்ற சினேகிதனானான்,
எ-று. (33)
846. அருமணி யார மார்ப ரிருவரு மனங்க னன்னார்
மருவிய புலத்துச் சிந்தை மாசுண மன்ன நீரார்
தருமநல் லுருசி யென்னுஞ் சாதுவின் பாதஞ் சேர்ந்து
திருவற மருளக் கேட்டோர் புலங்கண்மேல் வெறுப்புச் சென்றார்.
(இ-ள்.) (அவ்வாறு சிநேகிதனாயிருக்கும்போது), அரும் -
அரிதாகிய, மணி - முத்துமணி இரத்தினமணிகளாலாகிய, ஆரம் -
மாலைகளை யணிந்த, மார்பர் - மார்பையுடையவர்களாகிய,
அனங்கனன்னார் இருவரும் - மன்மதனுக் கொப்பானவர்களாகிய
இராஜகுமாரன் மந்திரிகுமாரன் ஆகிய விருவரும், சிந்தை - மனதோடு,
மருவிய - சேர்ந்திராநின்ற, புலத்து - பஞ்சேந்திரிய விஷய
காமபோகங்களில், மாசுண மன்ன - ஸர்ப்பத்துக்குச் சமானமாகிய,
நீரார் - குணமுடையவர்களாய், (இருந்து பின்னர்), தரும
நல்லுருசியென்னும் - தர்மருசியென்னும் பெயரையுடைய, சாதுவின் -
ஜினமுனிவனுடைய, பாதம் - பாதங்களை, சேர்ந்து - அடைந்து,
திருவறம் - ஸ்ரீஜின தருமத்தை, அருள - அவர் கூறியருள, கேட்டு -
கேள்வியுற்று, ஓர் - ஒப்பற்ற, புலங்கல்மேல் - இந்திரிய விஷய
போகங்களின்மேல், (உண்டாகிய), வெறுப்பு - வெறுப்பில், சென்றார் -
சேர்ந்தார்கள், (அதாவது : வைராக்கியத்தை யடைந்தார்கள்),
எ-று. (34) |