396மேருமந்தர புராணம்  


 

847. மாற்றிடைச் சுழற்றும் மட்டிற் புலங்கண்மேன் மற்றி வற்றை
    யாற்றவுந் துறக்க மாற்றின் சுழற்றிய தகலு மாகிற்
    காற்றியெம் மனத்து மட்டைக் கடையிலாத் தெளிவை யாக்கு
    மாற்றல்சால் துறவென் றோது மருமருந் தளிக்க வென்றார்.

     (இ-ள்.) (அங்ஙன மடைந்த அவர்கள் அம்முனிவனை நோக்கி),
மட்டில்  - கள்ளைப்போல் மயக்கத்தைச் செய்யும் படியான, புலங்கள்
மேல்    - இந்திரிய    விஷயங்களிலே,   (இஷ்டம்,    அனிஷ்டம்,
என்பவைகளில் மெட்டில்லாமல் ராகத்வேஷங்களோடு கூடினால் அது),
மாற்றிடை    - இந்த   ஸம்ஸாரத்திலே,  சுழற்றும் - (கள்குடித்தவன்
ஹேயோபாதேயமின்றிப்   புத்தி  கெட்டுச் சுழல்வது போல அவ்வாறு
கூடியவனைச்) சுழல்விக்கும், இவற்றை - இந்தப் பஞ்சேந்திரிய விஷய
ராகத்வேஷங்களை,   ஆற்றவும்  - மிகவும், (அதாவது : முழுதிலும்),
துறக்க    - வர்ஜனை     செய்ய (அதாவது : நீக்கிவிட), மாற்றின் -
ஸம்ஸாரத்தினுடைய,   சுழற்றியது  - சுழற்சியாகிய ஜனனமரணமானது,
அகலும் ஆகில்   - நீங்கி ஆத்மன் ஸ்வஸ்தபாவத்தையடையுமானால்,
எம்மனத்து        - எங்களுடைய    மனதிலுண்டாகிய,  மட்டை -
மதுமயக்கத்தை,    (அதாவது :    கள்ளைப்போல     மயக்கத்தைச்
செய்யும்படியான, மனோஜ்ஞ,   அமனோஜ்ஞ இந்திரிய   விஷய ராக
த்வேஷங்களை), காற்றி     - போக்கி, கடையிலா   - முடிவில்லாத,
தெளிவை   - ஹேயோபாதேய விஜ்ஞானமாகிய வறிவை, ஆக்கும் -
உண்டு     பண்ணும்படியான, ஆற்றல்    சால்  - சக்தியில் மிகுந்த,
துறவென்று   - பாஹியாப்பியந்தர பரிக்கிரக நிவர்த்தி என்று, ஓதும் -
சொல்கின்ற, அரும் - பெறுதற்கரிதாகிய, மருந்து - பரமௌஷதமாகிய
ஜினதீக்ஷையை, அளிக்க - சிக்ஷையுடன் கொடுக்கவேண்டும், என்றார்
- என்று சொன்னார்கள், எ-று.                             (35)

848. மாதவ னருளிச் சித்தி வருகமற் றிவர்கட் கென்னாப்
    போதணி குஞ்சி வாங்கப் புணர்ந்துமா தவத்திற் சென்றா
    ராதாம் பண்ணு நாமத் தரசிளங் குமரன் பாலின்
    மாதிரம் பில்கு நல்ல வார்த்தைமா முனிவ னானான்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொன்னபோது),    மாதவன்  - தர்மருசி
முனிவரனானவன், இவர்கட்கு   -     இவ்விருவர்கட்கும்,    சித்தி -
ஸ்வாத்மோ பலப்தியாகிய ஸித்தியானது,வருக - வரக்கடவது,என்னா -
என்று,   அருளி  - ஆசீர்வதித்து, போதணி - புஷ்பமாலைகளணிந்த,
குஞ்சி    - தலைமயிர்    முதலானவைகளை, வாங்க    -    தபோ
*தீக்ஷாவிதியின்   கிரமத்தால்    பரிஹரித்து ஜினதீக்ஷையினை யருள,
மாதவத்தில்  - பெரிதாகிய தபத்தில், புணர்ந்து - சேர்ந்து, சென்றார் -
இவ்விருவரும்  சென்றார்கள், (அவர்களுள்), ஆதரம் பண்ணு நாமத்து
- ப்ரீதிங்கரனென்னும்         பெயருடைய,     அரசிளங்குமரன் -
இராஜபுத்திரனாகியவன், பாலின்     -   பால்போல்,    மாதிரம்   -
மாதுரியத்தை,பில்கும் - கொடுக்கும், நல்ல - நன்மையாகிய, வார்த்தை
- (கேட்