398மேருமந்தர புராணம்  


 

கிரதையாக    அல்லது   அருமையாக)   நடப்பதுபோலவும், ஏற்ற -
இசைந்திராநின்ற,   நாண்மீனோடு  - அன்றன்றைய நட்சத்திரத்தோடு,
ஏகும்    -     கிரமஹானியின்றிச்    செல்கின்ற,     பிறையென -
சந்திரன்போலவும்,   இல்லந்தோறும்  - (வீடு வரிசையாக), ஒவ்வொரு
வீட்டிலும்,   மாற்றின் - ஸம்ஸாரத்தின், வெம் - வெப்பம் பொருந்திய,
துயரம்    -    துக்கம், தீர   -   நீங்க, மருந்து   - ஒளஷதத்தை,
உண்பான்போல் - உண்பவனை யொப்ப, புக்கான் - அப்பட்டணத்தின்
வீதியில் நடந்தான், எ-று.                                 (38)

851. ஆயிடைக் கணிகை புத்தி சேனைதன் னகத்தைச் சார்ந்த
    மாயமி றவத்தி னானை வந்தெதிர் கொள்ள மற்ற
    வேயெனத் திரண்ட தோளாள் விழுமிய தானஞ் செய்தற்
    கேயுநற் குலத்துட் டோன்றற் கேதுவென் னிறைவ வென்றாள்.

     (இ-ள்.)   ஆயிடை  -  அப்பொழுது,  கணிகை - தாசியாகிய,
புத்திசேனை  தன்   - புத்தி ஷேனையினுடைய, அகத்தை - வீட்டை
(அதாவது :  வீட்டிற்கெதிரே தெருவில்), சார்ந்த - அடைந்த, மாயமில்
- மாய்கையில்லாத, தவத்தினானை - தபஸையுடைய அம்முனிவரனை,
மற்று    -    பின்னை,  அ   - அந்த, வேயெனத்திரண்ட - பச்சை
மூங்கில்போல்   திரட்சியாகிய,   தோளாள் - கைகளையுடைய புத்தி
ஷேனையானவள்,  எதிர்கொள்ள வந்து - எதிர் கொள்ளுதற்கு வந்து,
(அவனை  நோக்கி), இறைவ   - சுவாமிகளே!, விழுமிய - பெரிதாகிய
(அதாவது : சத் பாத்திரங்களில் செய்யப்படுவதாகிய), தானஞ்செய்தற்கு
- ஆஹாராதி   தானங்களைச் செய்வதற்கு, ஏயும் - இசையும்படியான,
நற்குலத்துள்  - உத்தமஜாதி வம்சங்களில், தோன்றற்கு - பிறப்பதற்கு,
ஏது   - காரணமானது,  என் - என்ன, என்றாள் - என்று கேட்டாள்,
எ-று.                                                  (39)

852. தன்னைநிந் தித்தல் தக்கோர்ப் பழிச்சுதல் தயாவோ டொன்றி
    யின்னுயிர்க் கருளை யீதல் புலைசுதேன் கள்ளின் மீண்டு
    மன்னிய குணத்தி னிற்றல் மாயமின் மனத்த ராதல்
    பன்னருங் குலத்தைப் பண்ணும் பான்மைக்கு நிமித்த மென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு   கேட்டவளை   அம்முனிவன்   நோக்கி),
தன்னை நிந்தித்தல் - (உண்மையறியாது பிரமத்தமாகி இந்திரியங்களின்
வழியே  பந்தகாரணமாய்ச்  செல்கின்றனையே என்று அறிந்து) ஆத்ம
நிந்தனை  பண்ணி (உதயபாவத்தை  வெறுத்து  உபசம பரிணாமத்திற்
கூடுதலும்,  தக்கோர்   - ஞானிகளான  பரமாத்மர்களை, பழிச்சுதல் -
தத்குணலப்தியார்த்தம்)   ஸ்துதிப்பதும்,   தயாவோடு - ஜீவதயவோடு,
ஒன்றி  - பொருந்தி, இன்   - இனிமையாகிய,   உயிர்க்கு - ஸம்ஸார
ஜீவன்களுக்கு,   அருளை - காருண்யத்தை,   ஈதல் - கொடுப்பதான
அபயபிரதானமும் (அதாவது : சத்தியானுசாரத்தினால் செய்யும் பிராணி
ஸம்யமமும்), புலைசு -