40மேருமந்தர புராணம்  


 

 85. கருமத்தின் கீழன கரும நோகமம்
    பெரியவா நோகமம் பொறிகொ ளாதன
    ஒருபொறி புலத்தன பலபு லத்தன
    கருதிய வறுவகைத் கந்த மாகுமே.

     (இ-ள்.)  கருதிய - கருதப்பட்ட,  அறுவகை - ஆறுவிதமாகிய,
கந்தம்  -  ஸ்கந்தங்கள்,  (கருமாபேக்ஷையினால்) கருமத்தின் கீழன -
கருமஸ்கந்தத்திற்கு   கீழ்ப்பட்டனவும்,   கருமம்   -    கருமத்திற்கு
யோக்கியமான     ஸ்கந்தம்,    நோகமம்    -  நோகருமஸ்கந்தம்,
பெரியவாநோகமம்    -    பெரியவா     நோகருமஸ்கந்தம்    என
நான்குவகையும்,   (இந்திரியாபேக்ஷையினால்),  பொறி  கொளாதன -
இந்திரியங்களுக்கு    விஷயமாகாதவை,    பல   புலத்தன  -   பல
இந்திரியங்களுக்கு   விஷயமானவை   (என  மூன்று  வகையாகவும்),
ஆம் - ஆகும், எ-று.

     ஆறுவகை ஸ்கந்தங்களாவன :

     (1) ஸூக்ஷ்மஸூக்ஷ்மம்  -  இரண்டு  பரமாணு கூடினவை முதல்
ஒன்று குறைந்த அனந்த பரமாணுக்கள் கூடினவை வரையில்.

     (2) ஸூக்ஷ்மஸ்கந்தம்  -  அனந்த   பரமாணுக்கள்  கூடினவை;
இவை   கரும   ஸ்கந்தமாகும்,   ஆத்ம   குணத்திற்குத்  தக்கவாறு
ஆத்மனில் பந்தித்துக் கருமசரீரத்தை ஆக்கும்.

     (3) ஸூக்ஷ்மஸ்தூலஸ்கந்தம் - ரஸம், கந்தம் முதலியவை.

     (4) ஸ்தூல ஸூக்ஷ்மம் -தமசாயாதிகள்

     (5) ஸ்தூலம் - ஜலதைலாதி.

     (6) ஸ்தூலஸ்தூலம் - பூமி பர்வதாதிகள்.

இவைகளில் (1) - கருமத்திற்குக் கீழன.

           (2) - கருமஸ்கந்தம்.

           (3) & (4) - நோகருமஸ்கந்தங்கள்

           (5) & (6) - பெரியவாநோகருமம்.

           (1) & (2) - பொறிகொளாதன.

           (3) & (4) - ஒரு பொறிபுலத்தன.

           (5) & (6) - பல புலத்தன.